கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை- மாணவர்கள் போராட்டம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அறிக்கை அனுப்ப வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா கொடூர சம்பவத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிற்சி மருத்துவர்களின் பணிகளை முறைப்படுத்த வேண்டும் என்பது மருத்துவ மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று.

கொல்கத்தா படுகொலையில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்ட போதும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இந்த சம்பவங்கள் கொல்கத்தாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே மருத்துவ மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமானது அனைத்து போலீசாருக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், நாட்டின் எந்த பகுதியில் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடந்தாலும் அப்பகுதியின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையை வாட்ஸ் அப், இ மெயில் மற்றும் ஃபேக்ஸ் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications