6%.. தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு சொன்ன முக்கிய அறிவுரை..பரபர கடிதம்! என்னாச்சு?
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அவசரமாக எழுதியுள்ளார். இந்தியாவில் தினசரி நோய் பாதிப்பு விகிதத்தை விட தமிழ்நாட்டில் கொரேனா பாதிப்பு விகிதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை அறிவுரைகளுடன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மொத்தம் 8 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு ராஜேஷ் பூஷன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் எந்த நிலையிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக கவலைக்குரிய பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு விகிதம் 5.5 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நோய் பாதிப்பு விகிதம் 6 சதவீதமாக இருக்கிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும். நோய் பாதிப்பை கண்டறிதல், பரிசோதனைகளை அதிகரித்தல், நோய் பாதித்தவர்களை கண்காணித்தல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications