2 வாரங்கள் நீட்டிப்பு.. லாக்டவுன் உத்தரவை மீறினால் என்ன தண்டனை தெரியுமா? மத்திய அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க, மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு மே 17ஆம் தேதி வரை மக்கள் இப்போதுள்ள நெறிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

Recommended Video

    Lockdown extended by two weeks | நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

    இருப்பினும், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு ஏற்றவாறு கெடுபிடிகள் அறிவிக்கப்பட்டன.

    Union home ministry issues warning for lock down violation

    இதில், சிவப்பு மண்டலம் மிகவும் அதிகமான கெடுபிடிகளுடன் இருக்கும். இருப்பினும் இப்போது உள்ள நிலைமையை விட சற்று தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களில் பயணிக்க முடியும், முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், அனைத்து மண்டலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளன.

    ஒருவேளை இந்த கட்டுப்பாடுகளை மீறினால், எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசின் இந்த உத்தரவை 2005ம் ஆண்டு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம். சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டும். 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை ஒரே இடத்தில் கூடசெய்ய எந்த ஒரு அமைப்புக்கும் உரிமை கிடையாது.

    திருமணங்கள் உள்ளிட்ட உறவினர்கள் கூட கூடிய நிகழ்வுகள் என்றால் சமூக இடைவெளி பின்பற்றப்படவேண்டும். அதிகபட்சம் 50 விருந்தினர்கள் மட்டுமே அதில் பங்கேற்க வேண்டும். இறுதிச் சடங்கு போன்ற நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அங்கும் சமூக இடைவெளி என்பது பராமரிக்கப்பட வேண்டும்.

    பொது இடங்களில் துப்புவது, அபராதத்துடன் கூடிய குற்றச் செயலாகும். மதுபானம், புகையிலை, பான், குட்காவை பொது இடங்களில் பயன்படுத்துவது அனுமதிக்கப்படமாட்டாது.

    மதுபானம், குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்யக்கூடிய கடைகள் அதிகபட்சம் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்களை நிற்க வைத்து விற்பனை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் கடையில் கூட அனுமதிக்க கூடாது.

    அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இந்த உத்தரவை உரிய வகையில் செயல்படுத்த பொறுப்பாளிகள் ஆவர். இந்த விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது 2005ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவு 51 முதல் 60 வரையிலான விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 கீழும் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+