கொரோனாவிலிருந்து குணமடைந்தார் அமித் ஷா.. வீட்டு தனிமையில் இருக்கப்போவதாக தகவல்
டெல்லி: கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டு தனிமையில் அவர் இருக்க உள்ளார்.
55 வயதாகும் அமித்ஷாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை பலனளிக்க தொடங்கியதன் காரணமாக மறுபடியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இதுதொடர்பாக அமித்ஷா இந்தியில் ட்வீட் செய்துள்ளார். இன்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதற்காக கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நலம் பெற வேண்டும் என்று விரும்பி வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றி. இன்னும் சில நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்த உள்ளேன்.
மருத்துவர்கள் என்னை சில நாட்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். மருத்துவமனை ஊழியர்களுக்கும், டாக்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த நோயில் இருந்து மீண்டு வருவதற்கு அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடக முதல்வர் எடியூரப்பா போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் சிலர் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பிறகு குணமடைந்து நலமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications