ஆந்திரா பெண்ணாறு-தமிழ்நாட்டின் கல்லணை, காவிரி-வைகை, குண்டாறு இணைப்பு திட்ட அறிக்கை ரெடி: மத்திய அரசு
பெண்ணாறு- காவிரி உள்ளிட்ட நதிநீர் இணைப்புகள் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: ஆந்திராவின் பெண்ணாறு- தமிழ்நாட்டின் கல்லணை இணைப்பு மற்றும் காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு ஆகியவை தொடர்பான ட் திட்ட அறிக்கைகள் நிறைவடைந்துவிட்டதாக மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு ஜல் சக்தித்துறை இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு எழுத்து மூலம் அளித்த பதில்:
*1980-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், 30 நதிகள் இணைப்பு (16 சமவெளிப் பிரதேசத்திலும் 14 இமாலயப் பிரதேசத்திலும்) அடையாளம் காணப்பட்டன. இவை தேசிய நீர் மேம்பாட்டு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களில் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றோடு தொடர்புடைய பெண்ணாறு (சோமசீலா)-காவேரி (கல்லணை) இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை பூர்த்தி அடைந்துள்ளது. இதேபோல் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றோடு தொடர்புடைய காவேரி (கட்டளை)-வைகை-குண்டாறு இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கைப் பூர்த்தி அடைந்துள்ளது.
நதிகள் இணைப்புத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தண்ணீர் பகிர்வு, தேவைப்படும் சட்டபூர்வமான ஒப்புதல்கள் கிடைத்தபின் அமலாக்க கட்டம் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார். இந்தத் திட்டங்களைப் பொருத்தவரை, பூர்த்தி செய்வதற்கு கால வரம்பு நிர்ணயிப்பது சிரமம் என்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இடையே நீர்ப் பங்கீடு மற்றும் பிற பிரச்சனைகளில் ஒருமித்தக் கருத்து எட்டப்படுவதைக் பொருத்தே முடிவு செய்யப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டூடு கூறினார்.
மேலும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து தொடர்பான கேள்விக்கு ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் அளித்த பதில்: உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த 24 மாநிலங்களில் 111 நீர்வழிப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம் 2016-ன் படி இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் தேசிய நீர்வழிப் பாதை 4-ல், வடக்கு பக்கிங்காம் கால்வாய் (பெத்தகஞ்சம் முதல் சென்னை மத்திய ரயில் நிலையம் வரை -316 கிலோ மீட்டர்), தெற்கு பக்கிங்காம் கால்வாய் (சென்னை மத்திய ரயில் நிலையம் முதல் மரக்காணம் வரை -110 கிலோ மீட்டர்), மரக்காணம் முதல் புதுச்சேரி வரை (கழுவேலிக் குளம் வழியாக -22 கிலோ மீட்டர்) இடம் பெற்றுள்ளது.
தேசிய நீர்வழிப் பாதை 20-ல் பவானி ஆறு (95 கிலோ மீட்டர்), 55-ல் காவேரி-கொள்ளிடம் ஆறு (311 கிலோ மீட்டர்), 69-ல் மணிமுத்தாறு (5 கிலோ மீட்டர்), 75-ல் பாலாறு (142 கிலோ மீட்டர்), 77-ல் பழையாறு (20 கிலோ மீட்டர்), 80-ல் பொன்னியாறு (126 கிலோ மீட்டர்), 99-ல் தாமிரபரணி ஆறு (62 கிலோ மீட்டர்) ஆகியவை நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications