பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா?
டெல்லி: பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் புகார்களை பெண்கள், பிரபலங்கள் என அனைவரும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். இதனால் இந்தியாவே பரபரப்பான சூழலில் உள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம் ஜே அக்பர் தனக்கு பாலியல் சீண்டல் விடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த சிஎன்என் தொலைக்காட்சி பத்திரிகையாளர் மஜ்லியே புவே கம்ப் புகார் தெரிவித்துள்ளார்.

அக்பர் அறை
இவர் கூறுகையில், 2007-ஆம் ஆண்டு 18 வயதாக இருக்கும் போது ஏசியன் ஏஜ் என்ற பத்திரிகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அதன் ஆசிரியராக இருந்தவர் எம்.ஜே. அக்பர். அப்போது மறுநாள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் இடம்பெறவுள்ள செய்தி, படங்கள் குறித்து ஒப்புதல் பெற அக்பரின் அறைக்கு சென்றேன்.

முத்தம்
அப்போது அக்பர் பார்த்த பார்வையே சரியில்லை. பின்னர் எனது இருக்கைக்கு வந்து தோள்பட்டையில் கையை வைத்து எனக்கு முத்தம் கொடுத்தார். மேலும் அவரது நாக்கை எனது வாய்க்குள் செலுத்தினார். என்னால் எதையும் செய்யவில்லை என்று அந்த பெண் பத்திரிகையாளர் ஹப்போஸ்ட் இந்தியா என்ற ஊடகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.

தகவல்கள்
இது பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில் அக்பர் மீது 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மீ டூ மூலம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி ராஜினாமா
அதுபோல் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications