பிரதமர் மோடி அதிரடி? மத்திய அரசில் திடீரென நம்பர் 2 ஆக உயர்த்தப்பட்டாரா சிவராஜ் சிங் சவுகான்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் திடீரென நம்பர் 2 இடத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் திட்டங்களை செயல்படுத்துதல், கண்காணிக்க மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காண்காணிப்பு குழுவை மோடி அமைத்ததை அடுத்து இந்த புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் சீனியர்களாக இருப்பவர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி உள்ளிட்டோர். மத்திய அரசில் நம்பர் 2 யார் என்பதில் எப்போதும் ராஜ்நாத்சிங்- அமித்ஷா இடையே போட்டி என்பதுதான் யதார்த்தம் என்கின்றன டெல்லி தகவல்கள். அதுவும் பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது கேபினட்டில் 2-வது இடம் யாருக்கு என்கிற விவாதம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென மத்திய அரசில் பிரதமர் மோடியின் அதீத நம்பிக்கைக்குரியவராக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முன்னேறியிருக்கிறாராம். பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் தற்போது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால்தான் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அரசில் நம்பர் 2 இடத்துக்கு உயர்த்தப்பட்டுவிட்டாரா? என்கிற சர்ச்சை உருவாகி இருக்கிறது.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் பதவி காலம் முடிவடைய இருக்கும் நிலையில் சிவராஜ் சிங் சவுகான் பெயர் அந்த பதவிக்கு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசில் நம்பர் 2 இடம் என்கிற பேச்சும் வலுத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவில் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்.ஆதரவுடன் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு நிதின் கட்காரி முன்னிறுத்தப்பட்டிருந்தார். இதனை நிதின் கட்காரியே பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் பாஜகவில் இனி சில காலம் சிவராஜ் சிங் சவுகானை மையமாக வைத்து அத்தனை புயல்களும் வீசும் என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications