பிரதமர் மோடி அதிரடி? மத்திய அரசில் திடீரென நம்பர் 2 ஆக உயர்த்தப்பட்டாரா சிவராஜ் சிங் சவுகான்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் திடீரென நம்பர் 2 இடத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் திட்டங்களை செயல்படுத்துதல், கண்காணிக்க மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காண்காணிப்பு குழுவை மோடி அமைத்ததை அடுத்து இந்த புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் சீனியர்களாக இருப்பவர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி உள்ளிட்டோர். மத்திய அரசில் நம்பர் 2 யார் என்பதில் எப்போதும் ராஜ்நாத்சிங்- அமித்ஷா இடையே போட்டி என்பதுதான் யதார்த்தம் என்கின்றன டெல்லி தகவல்கள். அதுவும் பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது கேபினட்டில் 2-வது இடம் யாருக்கு என்கிற விவாதம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென மத்திய அரசில் பிரதமர் மோடியின் அதீத நம்பிக்கைக்குரியவராக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முன்னேறியிருக்கிறாராம். பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் தற்போது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால்தான் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அரசில் நம்பர் 2 இடத்துக்கு உயர்த்தப்பட்டுவிட்டாரா? என்கிற சர்ச்சை உருவாகி இருக்கிறது.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் பதவி காலம் முடிவடைய இருக்கும் நிலையில் சிவராஜ் சிங் சவுகான் பெயர் அந்த பதவிக்கு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசில் நம்பர் 2 இடம் என்கிற பேச்சும் வலுத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவில் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்.ஆதரவுடன் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு நிதின் கட்காரி முன்னிறுத்தப்பட்டிருந்தார். இதனை நிதின் கட்காரியே பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் பாஜகவில் இனி சில காலம் சிவராஜ் சிங் சவுகானை மையமாக வைத்து அத்தனை புயல்களும் வீசும் என்கின்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications