ஓட்டுநர் உரிமம், எல்எல்ஆர் காலாவதியாச்சா.. நோ டென்சன்! பிப்ரவரி 29 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கு
டெல்லி: சாரதி இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக எல்.எல்.ஆர், ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் செல்லுபடியாகும் காலத்தை பிப்ரவரி 29 ஆம் தேதி வரை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நீட்டித்து இருக்கிறது.
ஓட்டுநர் உரிமம், எல்.எல்.ஆர், நடத்துனர் உரிமம் போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கும், உரிமத்தை நீட்டிப்பதற்கும் சாரதி என்ற இணையதளத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நடத்தி வருகிறது. இந்த அடையாள அட்டைகளை வழங்கும் சாரதி இணையதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன. இதன் காரணமாக எல்.எல்.ஆர்., ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை இந்த பிப்ரவரி 29 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை சாரதி இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கின்றன. இதன் காரணமாக உரிமம் தொடர்பான சேவைகளைப் பெற முடியாமல் விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை தங்கள் சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், இதன் காரணமாக காலாவதியான எல்.எல்.ஆர், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமங்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி வரை அபராதம் எதுவும் வசூலிக்காமல் செல்லுபடியாகும் அறிவித்து உள்ளது.
இணையதள சேவைகள் பகுதி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டதால், கட்டணம் செலுத்துதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், எல்.எல்.ஆர்., பதிவு, ஓட்டுநர் திறன் தேர்வு ஆகிய சேவைகளை விண்ணப்பதாரர்கள் பெற முடியவில்லை என்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பரிவாகன் இணையதள சேவை பாதிக்கப்பட்ட காலத்தில் மக்கள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் கொண்டே ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் காலாவதியான எல்.எல்.ஆர், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று இவற்றை போக்குவரத்து அதிகாரிகளும் மேற்குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் காலாவதியான ஆவணங்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி செல்லுபடியாகும் என கருதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications