சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்தி வைக்க முடியாது...உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி விளக்கம்!!
டெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்பு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது. எனவே, முன்பு திட்டமிட்டபடி, தேர்வு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக தேர்வை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தேர்வர்கள் 20 பேர் தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையில், இந்த தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக மத்திய அரசும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று யுபிஎஸ்சி பதில் அளித்து இருந்தது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது என்று விளக்கமும் அளித்து இருந்தது.
இந்த நிலையில் ஏன் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிடுமாறு, யுபிஎஸ்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
நாட்டின் 72 நகரங்களில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். ஏற்கனவே மே 31 மற்றும் ஜூன் 5ஆம் தேதிகளில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications