யு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை!
டெல்லி: அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ளனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இதனால் சீனாவுக்கு எதிரான கடும் போக்கை கடைபிடிக்கும் டொனால்ட் டிரம்புக்கே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பிரசாரத்தில் சீனா சார்பு
அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் பொறுத்தவரை தம்மை சீனா எதிர்ப்பாளராகவும் ஜோ பிடனை சீனா ஆதரவாளராகவும் முன்னிறுத்தும் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. ஜோபிடன் அதிபரானால், அவர் சீனாவுக்கு சாதகமாகவே முடிவெடுப்பார்; இந்தியாவ்வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றெல்லாம் பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.

இந்தியா-யுஎஸ் அமைச்சர்கள் ஆலோசனை
இந்த பின்னணியில் இந்தியா, அமெரிக்கா இடையே இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 3-வது ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் அக்டோபர் 26,27 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

சீனா ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம்
அமெரிக்கா அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பருடன் இந்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் சீனாவுடனான எல்லை பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.

பசிபிக் பிராந்திய பாதுகாப்பு
எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் குறித்து அமெரிக்காவுக்கு விளக்கப்படவும் இருக்கிறது. பசிபிக் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாகவும் சீனாவை இந்த பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் வியூகம் தொடர்பாகவும் இருநாட்டு அமைச்சர்கள் குழுவும் ஆலோசனை நடத்தும். அதேபோல் இருநாடுகளும் தங்களிடையேயான மிக முக்கிய புலனாய்வு தகவல்களையும் பரிமாறிக் கொள்ள இருக்கின்றனர். இதற்கு முன்னர் 2018, 2019-ல் இந்தியா, அமெரிக்கா இடையே இது போன்ற ஆலோசனை மாநாடுகள் நடைபெற்றும் உள்ளன.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications