கும்பமேளா.. அரசியல் நெருக்கடி.. உத்தரகாண்ட் மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் ராஜினாமா! .
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தீரத் சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரை சந்தித்து அளித்தார்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்திருப்பதற்கு அரசியல் நெருக்கடி காரணம் என்று கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10 ஆம் தேதி பொறுப்பேற்றார். ஆனால் மூன்று மாதங்களிலேயே அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கவிழும் அபாயம்
திருவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக தீரத் சிங் ராவத் உத்தரகாண்ட் முதல்வராக கடந்த மார்ச் 10ம் தேதி பதவியேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னர், மாநில பாஜக தலைவர்கள் தொடர்ந்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக பாஜக அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டது.

மேலிடம் உத்தரவு
இதையடுத்து பாஜக மேலிடம் கட்சி உயர்மட்டக்குழு தீரத் சிங் ராவத்தை டெல்லிக்கு அழைத்திருந்தது. கடந்த 3 நாட்களாக டெல்லியில் பல்வேறு பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இறுதியில் அவரை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் பணித்தது. இதனையடுத்து கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை தீரத் சிங் ராவத் அளித்தார்.

பாஜக எம்எல்ஏக்கள்
உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனிடையே உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி புதிய முதல்வரை தேர்வு செய்ய உள்ளார்கள். இதனிடையே ராஜினாமா செய்த தீரத் சிங் ராவத் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

கும்பமேளா
முதல்வராக கடந்த 3 மாதத்திற்கு முன்பு பொறுப்பேற்ற உடனேயே, தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் குறித்து பேசியதை பெரும் சர்ச்சையானது. இதேபோல் 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டது பிரிட்டன் அல்ல அமெரிக்கா என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று உச்சத்தில் கும்பமேளாவை அவர் கையாண்டதும், "ஆர்டி-பி.சி.ஆர் சோதனை தேவையில்லை" என்று அவர் பேசிய கருத்தும் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்துடன் பாஜக தலைவர்கள் மத்தியலும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு பாஜக கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications