ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்
டெல்லி: 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் எம்பியாக அடி எடுத்து வைத்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வைகோ இயல்பாகவே உணர்ச்சி பொங்க பேசி மக்களை கவரக்கூடியவர். இவர் கடைசியாக 1999ம் ஆண்டு சிவகாசி தொகுதி எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றம் சென்றார். அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் வைகோ எம்பியாகவில்லை. வைகோவின் அரசியல் நகர்வுகள், அதிமுக,திமுக என மாறி மாறி இருந்த நிலையில், இடையில் தேமுதிக தலைமையில் தனி அணியும் அமைத்து பார்த்தார்.

ஆனால் அதற்கு முற்றிலும் வரவேற்பு இல்லாத நிலையில், மீண்டும் திமுகவுடன் கைகோர்த்தார். இந்த சூழலில் திமுக சார்பில் ராஜ்யசாபா எம்பியாக நிறுத்தப்பட்டு போட்டியிட்டின்றி வைகோ வெற்றியும் பெற்றுள்ளார்.
அதேநேரம் எம்பியாக தேர்வு செய்யப்படவிருந்த நேரத்தில் தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு நீதிமன்றம் ஓராண்டு தண்டனை விதித்து. இதனால் எம்பியாவாரா என்று பரபரப்பு நிலவிய நிலையில், இன்று வெற்றிகரமாக எம்பியாக பதவியேற்றுள்ளார். இன்று நாடாளுமன்றம் சென்ற உடன் வைகோ அங்கிருந்த அண்ணாவின் சிலையை முன் காலை தொட்டு வணங்கினார். இதேபோல் காமராஜர் மற்றும் முத்துராமலிங்க தேவரின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார். இதை பார்த்து எம்பிக்கள் பலர் நெகிழ்ந்தனர்.
இந்நிலையில் எம்பியாக பதவியேற்ற வைகோவுக்கு அங்கிருந்த திமுக எம்பிக்கள் உள்பட பல எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இன்று எம்பியாகி உள்ள வைகோ நாளையே ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள். வைகோ இனி நாடாளுமன்றத்தில் புலி போல் உருமுவார் என்றும் சிங்கம் போல் கர்ஜிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக எந்த பிரச்னை குறித்து பேசினாலும் வைகோ புள்ளி விவரத்தை பட்டியலிட்டு அழகாக பேசுவார் என்பதால், நாடாமன்றத்தில் மத்திய அரசின் எந்த திட்டங்கள் தமிழகத்திற்கு எதிராக இருந்தாலும், அதற்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என மதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications