நேற்று பட்டு.... இன்று கொட்டு... வைகோ-வெங்கையா நாயுடு இடையே லடாய்
டெல்லி: ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலையில் இன்று சபையில் அவரிடம் குட்டும் வாங்கியிருக்கிறார் வைகோ.
ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லி சென்ற வைகோ பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். வைகோவின் எதிரியான சுப்பிரமணியன் சுவாமி கூட வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமாக வைகோ சந்தித்தார். அப்போது வெங்கையா நாயுடுவுக்கு பட்டு சால்வை போர்த்தி தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
இன்று ராஜ்யசபாவில் பூஜ்ய நேரத்தின் போது வைகோவுக்கு முதல் வாய்ப்பை வழங்கினார் வெங்கையா நாயுடு. இந்த வாய்ப்பில் தமிழகத்தில் மத்திய அரசு நாசகார திட்டங்கள் எப்படியெல்லாம் திணிக்கப்படுகிறது என பட்டியலிட்டார் வைகோ.
பொதுக்கூட்டங்களில் தொடக்கத்தில் அமைதியாக வைகோ உரையைத் தொடங்குவார். ஒருகட்டத்தில் குரல் அளவு உயரும்.. இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க இடியாய் முழங்குவார். பெரும்பாலான பொதுக்கூட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் வகையில்தான் பேச்சை நிறைவு செய்வார் வைகோ.
அதேபாணியில்தான் ராஜ்யசபாவிலும் இன்று வைகோ பேசினார். தொடக்கத்தில் அமைதியாக மெதுவான குரலில் தொடங்கிய வைகோவின் பேச்சு ஒரு கட்டத்தில் கிடுகிடுவென ஓடியது...பின்னர் முடிக்கும் போது இந்திய அரசை எச்சரிக்கிறேன் என்றார். அப்போது வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, சபையில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசக் கூடாது; அடுத்தது ரொம்ப வேகமாக பேசக் கூடாது என குட்டு வைத்தார்.
ஆம் நேற்று பட்டு இன்று குட்டு!
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications