Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே பாரத்திற்கு வந்த சோதனை.. பயணிகள் மத்தியில் ஆர்வம் இல்லை..நிறுத்தப்பட்ட சேவை..எங்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை விரிவுபடுத்த ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் நாக்பூர்- பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிமகாக நிறுத்தப்பட்டுள்ளது. 8 பெட்டிகளாக இந்த ரயில் சேவை குறைக்கப்பட்டு இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இந்தியா ரயில்வேயை நவீனப்படுத்தும் முயற்சிகளில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. ரயில் பயணிகளின் சொகுசான பயணத்தை அளிக்கும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சென்னை - மைசூரு, சென்னை - கோவை உள்பட நாடு முழுவதும் 15 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

vande-bharat-train-between-nagpur-bilaspur-temporarily-stopped-due-to-the-poor-occupancy

வந்தே பாரத் ரயிலில் விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளும் அதிவேகமாக செல்லக்கூடிய திறன் கொண்டவை என்பதாலும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் ஆர்வம் உள்ளது. முழுவது ஏசி, தானியங்கி கதவுகள், சுழலும் இருக்கைகள் என வந்தே பாரத் ரயிலில் இருக்கும் வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

வந்தே பாரத் ரயில்களை இன்னும் பல வழித்தடங்களில் அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், பயணிகள் ஆர்வம் காட்டாத காரணத்தால் ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

வந்தே பாரத் ரயிலை மேலும் பல நகரங்களுக்கு விரிவு படுத்த ரயில்வே திட்டமிட்டு இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது கவனிக்கத்தக்கது. 18 பெட்டிகள் கொண்டதாக இயக்கப்பட்டு வந்த இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகள் ஆர்வம் காட்டாமல் காலியாக சென்று வருவதால் 8 பெட்டிகளாக குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் ரயில் 8 பெட்டிகள் கொண்டதாக தற்போது இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து இருப்பதால் 16 பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இதனால் செகந்திராபாத் - திருப்பதி வழித்தடத்தில் ஓடும் ரயிலை நாக்பூர் - பிலாஸ்பூரில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதுவரை இந்த வழித்தடத்தில் 11 பெட்டிகளை கொண்ட தேஜாஸ் ரயில் இயக்கப்படும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

நாக்பூர் - பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலால் இரு நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் 7-8 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் 30 நிமிடங்களாக குறைந்தது. எனினும் அதிகமான கட்டணம் உள்ளிட்டவற்றையால் பயணிகள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+