வியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு!
டெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில், இந்திய அரசின் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. 15:1 என்ற விகிதத்தில், கிடைத்துள்ள இந்த தீர்ப்பால், குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது.
நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு உலக நாடுகள் அனைத்தாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ஒன்றாகும்.

ரா ஏஜென்ட் என்று குற்றம்சாட்டி குல்பூஷன் ஜாதவை, 2016 மார்ச் 3ம் தேதி கைது செய்தது பாகிஸ்தான். உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட அவர் பலூசிஸ்தானின் மாஷ்கெல் பகுதியில் ஊடுருவியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
2017ம் ஆண்டு, ஏப்ரல் 10ல், உளவு பார்த்தத குற்றச்சாட்டில், பாகிஸ்தான் ராணுவ தீர்ப்பாயத்தால் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஜாதவ் வழக்கில் வியன்னா ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டிய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக, 2017, மே 8ம் தேதி சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும், அதுவரை, ஜாவுக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றக் கூடாது, என்று சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், வியன்னா ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் மீறியுள்ளது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்ட குட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications