தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், இன்று சேவா தீர்த் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 10 நிமிட மட்டுமே நீடித்தது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
தமிழ்நாட்டின் கலாச்சாரம், மாநில தன்னாட்சி உரிமை மற்றும் அண்மையில் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடும் நடைமுறை விதிகள் குறித்து மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை பிரதமரிடம் முதல்வர் விஜய் முன்வைத்துள்ளார்.

முதல் கோரிக்கை
சமீபத்தில் முதல்வர் பதவியேற்பு விழா மற்றும் அமைச்சர்கள் பதவி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாக பாடப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் விஜய்யின் முதல் பிரதமர் சந்திப்பில் முதல் கோரிக்கையாக தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து வைத்துள்ளார்.
மாநிலத்தின் தனித்துவ அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தின் மாண்பைக் காக்கும் வகையில், மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரிடம் முதல்வருடன் விஜய் சந்திப்பு
இந்த அரசியல் சர்ச்சைகளுக்கும் குழப்பங்களுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தை நேரடியாகப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டில் எப்போதும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வரும் நீண்ட கால வழக்கம் உள்ளதை விஜய் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சர்குலர் மூலம் ஏற்பட்டுள்ள இந்த நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலை முதன்மையாகப் பாடுவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் உரிய தெளிவுரையையும் (Clarification) அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலையும் விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் நேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வர் - அமைச்சரவை பதவியேற்பு விழா
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்ற விழாவில் புதிய பாடல் நடைமுறை பின்பற்றப்பட்டது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே மாநில வாழ்த்து பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்பட்டு, நிகழ்ச்சி நிறைவடையும் போது 'தேசிய கீதம்' பாடப்படுவதுதான் மரபாக இருந்து வருகிறது.
ஆனால், புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில், 'வந்தே மாதரம்' பாடல் முதலாவதாக இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இரண்டாவதாகப் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது.
அதேபோல், பதவியேற்பு விழா முழுமையாக நிறைவடையும் போதும், முதலில் வந்தே மாதரமும், அடுத்ததாக தேசிய கீதமும் பாடப்பட்டு நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இந்தத் தலைகீழ் மாற்றம், தமிழ்நாட்டின் வழக்கமான அரசு நெறிமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜனவரி மாத சர்குலர்
இந்த மாற்றத்திற்குப் பின்னணியில், மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிட்ட ஒரு புதிய சர்குலர் (Circular) இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்த அரசாணையின்படி, சில குறிப்பிட்ட முக்கிய அரசு மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை முதலாவதாகப் பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மத்திய அரசின் புதிய விதிமுறையைப் பின்பற்றியே, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தனர். இதன் காரணமாகவே, தமிழ்நாட்டின் மரபிற்கு மாறாகத் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது என்ற புதிய விளக்கம் தற்போது வெளிவந்துள்ளது.
கடுமையான எதிர்ப்பு
தமிழ்நாடு அரசின் பாரம்பரிய நடைமுறையானது மாற்றியமைக்கப்பட்டு, மாநில வாழ்த்துப் பாடல் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்த புதிய விவகாரத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளிடம் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தது.
மாநிலத்தின் இறையாண்மை மற்றும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகப் பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். புதிய முதலமைச்சரின் முதல் விழாவிலேயே இத்தகைய சர்ச்சை வெடித்தது, சமூக ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
கொடுமை! குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு.. புகார் அளித்த வழக்கறிஞர் மீது தவெகவினர் தாக்குதல் -
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா!












Click it and Unblock the Notifications