வரும் ஆனா வராது.. கொரோனா 4வது அலைக்கு இந்தியாவில் வாய்ப்பு மிக குறைவு.. ஆனாலும் இது மிக முக்கியம்.!
டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் , நாட்டில் கொரோனா 4வது அலை ஏற்பட வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது எனவும், அதே நேரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரபல வைராலஜி நிபுணர் டி ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்.
சீனாவின் வூகான் மாகணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவிபெரும் அச்சுறுத்தல் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, கொரோனா டெல்டா வகையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தற்போது இந்தியாவில் மூன்றாவது அலை குறைந்து வரும் நிலையில், நான்காவது அலை இந்தியாவில் ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது கணித்துள்ளனர். கொரோனா நான்காவது அலை குறைந்தது நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா 4வது அலை
இந்தியாவின் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அரசு மருத்துவ நிபுணர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரபல வைராலஜிஸ்ட் நிபுணரான டி ஜேக்கப் ஜான் தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரிப்புக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகக் கூறினார்.

வாய்ப்பு குறைவு
அதே நேரத்தில் அரசும் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா 4வது அலை நடக்காது என்று யாராலும் கணிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். "நான்காவது COVID-19 அலையை கணிக்க அறிவியல், தொற்றுநோயியல் காரணம் எதுவும் இல்லை, ஆனால் அது நடக்காது என்று யாராலும் கணிக்க முடியாது. நிகழ்தகவு மிகவும் குறைவு என்று என்னால் கூற முடியும் என்ற ஜேக்கப், ஓமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடுகள் மற்ற இடங்களில் உள்ள நிகழ்வுகளில் ஒரு வேகத்தைத் தூண்டுவதால், வைரஸ்கள் மற்றும் அவற்றின் மரபணு வரிசைகளை தொடர்ந்து பார்க்க வேண்டியதன் அவசியம் என்றார்.

தடுப்பூசி அளவு
பிப்ரவரி மாத இறுதியில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு வழக்குகள் மீண்டும் உயரக்கூடும் என்று இன்னும் மதிப்பாய்வு செய்யப்படாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நோய்த்தொற்றுகளின் தீவிரம் அல்லது அளவு, மாறுபாடு மற்றும் தடுப்பூசியின் காரணமாக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு போன்ற கூடுதல் காரணிகளைப் பொறுத்து சுமார் நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பயம் தேவையில்லை
மனிதர்களுக்கு எப்படி பயத்தை ஏற்படுத்த வேண்டும், எதற்காகப் பயமுறுத்த வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அதனால், கணித மாடலிங் அடிப்படையிலான அலையை கணிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. டைப் டூ போலியோவுடன் கணினிகளில் இருக்கும் கணித மாடலிங் பிரச்சனைகளைப் பற்றி நான் சொல்கிறேன், தடுப்பூசிகள் காரணமாக கொரோனா 4வது அலைக்கு பயப்பட தேவையில்லை என்றும் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications