கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு வேலை தர தயார்! பிரபல இசையமைப்பாளர் அறிவிப்பு
டெல்லி: கங்கனா ரனாவத்தை சிஐஎஸ்எப் காவலர் அடித்தது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அருக்கு வேலை தரத் தயாராக இருப்பதாக இசையமைப்பாளர் விஷால் தத்லானி தெரிவித்துள்ளார்
நடிகை கங்கனா ரனாவத் நேற்று சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி கிளம்ப இருந்தார். அப்போது செக்யூரிட்டி செக் இன் பகுதிக்கு அவர் சென்ற போது சிஎஸ்ஐஎப் காவலர் ஒருவர் அவரை அறைந்துள்ளார்.

இதையடுத்து கங்கனா ரனாவத் அங்கிருந்து கிளம்பினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முற்பட்ட போதிலும் அவர் பதிலளிக்கவில்லை. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
விவசாய அமைப்புகள்: ஒரு பக்கம் கங்கனா ரனாவத்தை தாக்கிய சம்பவத்தைப் பலரும் கண்டிக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கங்கனா ரனாவத்தை தாக்கி சிஐஎஸ்எப் காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே குல்வீந்தர் கவுருக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. அவர் மீது தேவையற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையே இந்த சிஐஎஸ்எப் காவலருக்கு உதவத் தயாராக இருப்பதாகப் பாடகர்- இசையமைப்பாளர் விஷால் தத்லானி தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒரு போஸ்டை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வேலை தரத் தயார்: அதாவது குல்விந்தர் கவுர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவருக்கு வேலை தர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "நான் எப்போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை.. ஆனால் இந்த காவலரின் கோபத்தை நான் முற்றிலும் புரிந்துகொள்கிறேன். சிஐஎஸ்எப் அமைப்பு அவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால்.. அவருக்கு ஒரு வேலை கிடைப்பதை நான் உறுதி செய்வேன். ஜெய் ஹிந்த். ஜெய் ஜவான். ஜெய் கிசான்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அவர் மீது விசாரணையும் நடத்தப்படச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஷால் தத்லானி தனது இன்ஸ்டாகிராம் வேறு சில ஸ்டோரிக்களையும் பகிர்ந்துள்ளார்.
சாடல்: ஒன்றில் "கங்கனாவை ஆதரிப்போருக்கு ஒரு கேள்வி.. உங்கள் அம்மா குறித்து யாராவது தப்பாகப் பேசினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டுள்ளார். அதேபோல மற்றொரு போஸ்டில் "நான் மீண்டும் சொல்கிறேன்.. கவுர் பணியில் இருந்து நீக்கப்பட்டால்.. அவருக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதை நான் உறுதி செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கங்கனா ரனாவத்தை ஏன் தாக்கினேன் என்பது குல்விந்தர் கவுர் விளக்கி இருந்தார். அதாவது, "டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்த போது 100 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கங்கனா போராட்டம் நடத்தியதாகப் பேசியிருந்தார். எனது அம்மாவும் அந்த போராட்டத்தில் இருந்தார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அதில் 5.37 லட்சம் வாக்குகளைப் பெற்ற கங்கனா ரனாவத், சுமார் 74,755 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது..
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications