Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்பு வாரிய மசோதா- கூட்டு குழு அறிக்கை தாக்கல்- எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. இதேபோல லோக்சபாவிலும் வக்பு வாரிய மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

இஸ்லாமியர்கள் தங்களது சமூகத்துக்கு தானமாக கொடுத்த சொத்துகளை நிர்வகிக்கும் அமைப்பு வக்ஃபு வாரியம் (வக்பு வாரியம்). வக்பு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்கனவே சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

loksabha waqf bill

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஆண்டு லோக்சபாவில் தாக்கல் செய்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அவசரம் அவசரமாக விவாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த 572 திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன; ஆனால் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

தற்போதைய வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் நாடு முழுவதும் உள்ள 50% வக்பு வாரிய சொத்துகள் அரசுடைமையாக்கப்படும் என்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதேபோல லோக்சபாவிலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+