'இந்தியாவில் பாகுபாடு இல்லை' மோடியின் பேட்டியை வைத்து பாஜக - காங்கிரஸ் இடையே வார்த்தை யுத்தம்
டெல்லி: வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, இந்தியாவில் சாதி, மதம் என்ற அடிப்படையிலான பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை என்று பேசினார். பிரதமர் மோடியின் இந்த கருத்தை வைத்து பாஜகவும் காங்கிரசும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடியிடம் ஜனநாயகம் குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி, ‛‛இந்தியா மற்றும் அமெரிக்காவின் டிஎன்ஏவில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் தான் இருநாடுகளிலும் முத்னமையானது. அதன் கீழ் தான் நாம் வாழ்கிறோம். ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது'' என பதிலளித்தார்.

மேலும் ‛‛இந்தியாவில் சாதி, மதம் என்ற அடிப்படையிலான பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருக்கும் ஒத்துழைப்பு, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்குமான முயற்சி என்ற நம்பிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து முன்னோக்கி எடுத்து செல்லப்படும்'' என்றார்.
இந்த நிலையில், பிரதமரின் செய்தியாளர் சந்திப்பை வைத்து பாஜகவும் காங்கிரசும் வார்த்தை யுத்தத்தில் இறங்கியுள்ளன. பிரதமரின் பதில் பலவீனமானது மற்றும் மந்தமானது என்று காங்கிரஸ் விமர்சித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த பாஜக, உள்நோக்கம் கொண்ட கேள்வியை பிரதமர் மோடி துவம்சம் செய்து இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications