Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழைய ஓய்வூதிய திட்டம்.. போராடினால் அவ்வளவுதான்.. ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசு ஊழியர்கள் சாதாரண விடுப்பு உட்பட எந்த விடுப்புகளுக்கு விண்ணப்பித்தாலும் அதை ஏற்க வேண்டாம் என்று உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் எந்த விதமான போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும், அதையும் மீறி ஈடுபட்டால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி வரும் கூட்டமைப்பின் பெயரில் தேசிய என்.ஜே.சி.ஏ. எனப்படும் தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் நாடு முழுவதும் மாவட்ட அளவிலான பேரணிகளை நடத்த ஏற்பாடு செய்து உள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பில் மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல்களுடன் கூடிய சுற்றறிக்கை சென்று இருக்கிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அதில் மத்திய அரசு ஊழியர்கள் ஒரே நேரத்தில் சாதாரண விடுப்பு எடுப்பது, தாமதாக பணிக்கு வருவது, உள்ளிருப்பு போராட்டங்கள், பேரணிகள், வேலை நிறுத்தங்கள் உட்பட எந்த வகையான போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்றும், அதை மீறும் ஊழியர்கள் மீது சிசிஎஸ் சட்ட விதி 7இன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

 நீதிமன்ற தீர்ப்புகள்

நீதிமன்ற தீர்ப்புகள்

"வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனுமதிக்கும் விதி சட்டத்தில் இல்லை. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது நடத்தை விதிகளை மீறும் செயல் என பல்வேறு தீர்ப்புகளின் மூலம் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தி இருக்கிறது. இது போராட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான வேலை நிறுத்தைத்தையும் தடுக்கிறது." என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுமுறை கூடாது

விடுமுறை கூடாது

அதேபோல் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தங்கள் நடைபெறும் நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் சாதாரண விடுப்பு உட்பட எந்த விடுப்புகளுக்கு விண்ணப்பித்தாலும் அதை ஏற்க வேண்டாம் என்றும், விருப்பம் இருக்கும் ஊழியர்கள் தடையின்றி அலுவலக வளாகத்துக்குள் நுழைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள், மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறார்கள்.

பாதுகாப்பு பணியாளர்கள்

பாதுகாப்பு பணியாளர்கள்

இதுபோன்ற நோக்கத்துக்காக பாதுகாப்பு பணியாளர்களுடன் இணைந்து செயல்படலாம் என்றும், அமைச்சகத்தால் இதற்கான திட்டங்கள் வகுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை ஊழியர்கள் தர்ணா, போராட்டம், வேலை நிறுத்தம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் எத்தனை பேர் ஈடுபட்டார்கள் என்ற விபரத்தை தெரிவிக்கவும் கூறியுள்ளது.

கூட்டு ஆலோசனை அமைப்பு

கூட்டு ஆலோசனை அமைப்பு

மத்திய அரசு பணியாளர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்பு ஏற்கனவே இயங்கி வருகிறது. மத்திய அரசுக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலை வழங்கும் அரசுக்கும், ஊழியர்கள் அமைப்புக்கும் இடையே பொதுவான விசயங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதுடன் பொதுப் பணிகளில் செயல்திறனை அதிகரிக்க வைக்கிறது.

ஊழியர்களின் பிரச்சனைகள்

ஊழியர்களின் பிரச்சனைகள்

ஜேசிஎம் எனப்படும் இந்த மத்திய அரசு பணியாளர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்பு பணியாளர்களின் முழு ஒத்துழைப்புடனேயே செயல்பட்டும் வருகிறது. அதன் முன் கொண்டு செல்லப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்து அது தீவிரமாக விவாதித்து தீர்வு காண முயற்சித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+