Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திட்டோம்.. அந்த நாளிலிருந்து விடியல் - அமித்ஷா பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் செனொவாரில் உள்ள சூரிய கோயிலில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்ட வைனவ சாமியார் ராமானுஜரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.

அதன் பின்னர் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிறுவியுள்ளது.

சிறப்பு சட்டம் நீக்கம்

சிறப்பு சட்டம் நீக்கம்

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஜம்மு காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எந்தவிதமாக ஏற்றத்தாழ்வும் இன்றி காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆளுநர் சின்ஹா வளர்ச்சியை வழங்கி வருகிறார். "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார சட்டம் 370 மற்றும் 35 A வை நீக்குவதன் மூலமாக அது முழுமையாக தேசத்தோடு ஒருங்கிணைக்கப்படும் என்று நாட்டு மக்கள் நம்பி வந்தனர்.

புதிய சகாப்தம்

புதிய சகாப்தம்

பிரதமர் நரேந்திர மோடி அதை செய்து காட்டினார். சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட 2019 ஆகஸ்டு 5 ஆம் தேதி ஒரு புதிய சகாப்தம் காஷ்மீரில் விடிந்திருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள சூர்ய கோயில் மீட்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டதால் திருப்தி அடைகிறேன். ராமானுஜரின் அமைதி சிலையை ஸ்ரீநகரில் உள்ள இந்த கோயிலில் திறந்து வைப்பது இந்திய மக்களுக்கு, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நல்ல அறிகுறியாக இருக்கும்.

ராமானுஜர் சிலை

ராமானுஜர் சிலை

இந்த சிலை ராமானுஜரின் போதனைகளை காஷ்மீரில் உள்ள அனைத்து மதங்களை பின்பற்றும் மக்களுக்கும் வழங்கி அமைதி மற்றும் வளர்ச்சியின்பாதையில் கொண்டு செல்லும். ராமானுஜர் அவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் தனது பணிகளை செய்து வந்தாலும் காஷ்மீருக்கு போதயனா விருதியை வாங்குவதற்காக வந்தார். காஷ்மீர் மன்னர் தனது நூலகத்தின் வாயில்களை மட்டும் திறக்காமல் சுவாமி ராமானுஜரையும் வரவேற்று இருக்கிறார்.

ராமானுஜர் சிலைகள்

ராமானுஜர் சிலைகள்

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் ராமானுஜரின் 216 அடி உயர சிலையை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் அவரது சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமித்ஷா காஷ்மீர் சூர்ய கோயில் திறந்து வைத்தது ராமானுஜரின் 11 வது சிலையாகும். 4 அடி உயரம் கொண்ட இந்த சிலை 600 கிலோ எடை கொண்டதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+