காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்திட்டோம்.. அந்த நாளிலிருந்து விடியல் - அமித்ஷா பெருமிதம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் செனொவாரில் உள்ள சூரிய கோயிலில் அமைதியின் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட்ட வைனவ சாமியார் ராமானுஜரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
அதன் பின்னர் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிறுவியுள்ளது.

சிறப்பு சட்டம் நீக்கம்
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஜம்மு காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எந்தவிதமாக ஏற்றத்தாழ்வும் இன்றி காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆளுநர் சின்ஹா வளர்ச்சியை வழங்கி வருகிறார். "ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார சட்டம் 370 மற்றும் 35 A வை நீக்குவதன் மூலமாக அது முழுமையாக தேசத்தோடு ஒருங்கிணைக்கப்படும் என்று நாட்டு மக்கள் நம்பி வந்தனர்.

புதிய சகாப்தம்
பிரதமர் நரேந்திர மோடி அதை செய்து காட்டினார். சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட 2019 ஆகஸ்டு 5 ஆம் தேதி ஒரு புதிய சகாப்தம் காஷ்மீரில் விடிந்திருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள சூர்ய கோயில் மீட்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டதால் திருப்தி அடைகிறேன். ராமானுஜரின் அமைதி சிலையை ஸ்ரீநகரில் உள்ள இந்த கோயிலில் திறந்து வைப்பது இந்திய மக்களுக்கு, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நல்ல அறிகுறியாக இருக்கும்.

ராமானுஜர் சிலை
இந்த சிலை ராமானுஜரின் போதனைகளை காஷ்மீரில் உள்ள அனைத்து மதங்களை பின்பற்றும் மக்களுக்கும் வழங்கி அமைதி மற்றும் வளர்ச்சியின்பாதையில் கொண்டு செல்லும். ராமானுஜர் அவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் தனது பணிகளை செய்து வந்தாலும் காஷ்மீருக்கு போதயனா விருதியை வாங்குவதற்காக வந்தார். காஷ்மீர் மன்னர் தனது நூலகத்தின் வாயில்களை மட்டும் திறக்காமல் சுவாமி ராமானுஜரையும் வரவேற்று இருக்கிறார்.

ராமானுஜர் சிலைகள்
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் ராமானுஜரின் 216 அடி உயர சிலையை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் அவரது சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமித்ஷா காஷ்மீர் சூர்ய கோயில் திறந்து வைத்தது ராமானுஜரின் 11 வது சிலையாகும். 4 அடி உயரம் கொண்ட இந்த சிலை 600 கிலோ எடை கொண்டதாகும்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications