இவிஎம் வேண்டாம்.. வாக்குச்சீட்டை கொண்டு வாங்க.. நாடு முழுதும் காங்கிரஸ் பிரசாரம் - கார்கே அறிவிப்பு
டெல்லி: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அது தேவை இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜகவின் உண்மையான நிலை என்ன என்பது தெரிந்துவிடும். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்" என்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது. பாஜக தலைமையிலான ‛மகாயுதி' கூட்டணியில் பாஜக மட்டும் தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தம் 233 தொகுதிகளை கைப்பற்றியது.

அதேவேளையில் ‛மகா விகாஸ் அகாடி' பெயரில் கூட்டணி அமைத்து இருந்த காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணி வெறும் 46 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
இந்த தோல்வியை தொடர்ந்து வழக்கம்போல் காங்கிரஸ் கட்சி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால் தான் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, ‛‛மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். இதற்காக காங்கிரஸ் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது'' என்று பரபரப்பாக அறிவித்துள்ளார்.
இன்று நம் நாட்டின் அரசியலமைப்பு தின நாளையொட்டி டெல்லியில் ‛அரசியலமைப்பு பாதுகாப்பு பிரசாரம்' என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் பற்றி நான் பேச விரும்பவில்லை.
ஆனால் ஏழை, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் வீணாகிப் போகிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இதனால் வாக்குச்சீட்டு முறைக்கு நாம் மாற வேண்டுமு். அவர்களே (பாஜக) மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து கொள்ளட்டும். நமக்கு இனி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம். வாக்குச்சீட்டு முறை தான் வேண்டும். அப்போது தான் அவர்களின் உண்மையான நிலை என்பது தெரியும்.
நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று ராகுல் காந்தி தலைமையில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரை போல் பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதுபற்றி மற்ற கட்சியினரிடம் பேச உள்ளோம் ’’ என்று தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே இப்படி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை











Click it and Unblock the Notifications