அந்த கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா பாய்ச்சல்!
ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்ட கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது, அது தனக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்ட கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது, அது தனக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளவில்லை.
குடியுரிமை சட்ட திருத்தம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது. சுமார் 1.30 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

என்ன சொன்னார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, இந்த நாடு தற்போது கலவரங்களை கண் முன்னே பார்த்து வருகிறது. பாஜகவின் ஆதரவோடு ஜேஎன்யூவில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அந்த கொடுமையை இந்தியாவே நேரடியாக கண்கொண்டு பார்த்தது. அதன்பின் ஜாமியா மிலியா, பிஎச்யூ உள்ளிட்ட பல கல்லூரிகளில் கலவரம் நடந்தது.

அரசு வெறுப்பு
மக்கள் மத்தியில் அரசு வெறுப்பை விதைத்து வருகிறது. மக்களை பிரிக்க பாஜக முயன்று வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாஜக மொத்தமாக உடைக்க பார்க்கிறது. அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாஜக இதை எல்லாம் செய்து வருகிறது.

ஆட்சி தெரியவில்லை
தங்களுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை என்பதை அமித் ஷாவும், மோடியும் நிரூபித்துவிட்டனர். அதனால் கலவரங்களை தூண்டி விடுகிறார்கள். என்ஆர்சி குறித்து அவர்கள் சொன்ன கருத்தை அவர்களே மாற்றி கூறி வருகிறார்கள். மாற்றி மாற்றி பேசி மக்களை குழப்பி வருகிறார்கள்.

பொருளாதாரம்
இந்தியாவில் தற்போது மிக மோசமான பொருளாதார பிரச்சனை நிலவி வருகிறது. நாளுக்கு நாள் பொருளாதாரம் சரிந்து வருகிறது. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குழம்பி வருகிறார்கள். அதை மறைக்கும் பொருட்டு, பாஜக இதை எல்லாம் செய்து வருகிறது, என்று சோனியா காந்தி பேசி உள்ளார்.
-
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications