சமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள்.. அது சிறப்பான மொழி.. எம்பி ஓபிஆர் பேச்சு.. பெரும் சர்ச்சை!
சமஸ்கிருதம் மொழியை தமிழக மக்கள் நேசிக்கிறார்கள், அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
டெல்லி: சமஸ்கிருதம் மொழியை தமிழக மக்கள் நேசிக்கிறார்கள், அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக லோக்சபாவில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடர்பான விவாதங்கள் உச்சம் அடைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 3 சமஸ்கிருத தனியார் பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் பல்கலைக்கழகங்ளாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் பல கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

எதிர்ப்பு
இந்த மசோதாவிற்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி, மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் ஆகியோர் மிக மிக கடுமையாக பேசினார்கள். தமிழ் எப்படி சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி,எதனால் தமிழ் சிறந்த மொழி. சமஸ்கிருதத்தை மத்திய அரசு ஆதரிப்பதற்கு பின் இருக்கும் அரசியல் என்ன என்பது குறித்து எல்லாம் இதில் இவர்கள் பேசினார்கள்.

அதிமுக ஆதரவு
இந்த நிலையில் இந்த மசோதாவை தமிழகத்தில் இருந்து தனி ஆளாக ஆதரித்து பேசினார் தேனி அதிமுக எம்பி ரவீந்திர நாத். சமஸ்கிருத மொழியை புகழ்ந்து பேசிய ரவீந்திரநாத் தனது பேச்சில், தமிழ் மொழியை போலவே சமஸ்கிருதம் பழமையானது. பல துறைகளில் சமஸ்கிருதம் மொழியில் புத்தகங்கள் உள்ளது. இலக்கியம், இலக்கணம், சமூகம், மருத்துவமும், வானியல் ஆகிய துறைகளில் சமஸ்கிருதம் வளர்ந்து இருந்தது.

ஆனால் என்ன
ஆனால் சமஸ்கிருதம் மொழியில் ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. பலர் இந்த மொழியை கவனிக்கவில்லை. அதனால் இனிமேலாவது மக்கள் இந்த மொழி மீது கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு சமஸ்கிருதம் மீதும் அதன் ஆராய்ச்சிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மசோதா
இந்த மசோதா அதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கு இந்த மொழி கற்றுத்தரப்படும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரம் மக்கள் சமஸ்கிருதம் மொழியை கற்று அதில் ஆராய்ச்சி செய்வார்கள். இதை நான் பெரிதாக வரவேற்கிறேன்.

தமிழ் பிடிக்கும்
தமிழக மக்களாகிய நாங்கள் தமிழை விரும்புகிறோம். அதேபோல் சமஸ்கிருதம் மொழியை மதிக்கிறோம். அதை நேசிக்கிறோம். அதேபோல் மற்ற மக்களும் தமிழை நேசிக்க வேண்டும் என்று ரவீந்திர நாத் பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு லோக்சபாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications