ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தை டெல்லியில் அமல்படுத்த மாட்டோம்.. ஆம் ஆத்மி பிடிவாதம்
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமல்படுத்தப்படாது என, ஆம் ஆத்மி அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மோடி தலைமையிலான அரசு, ஆயுஷ்மான் பாரத் இலவச திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்களை அமல்படுத்தியது. இத்திட்டங்களின்படி நாட்டிலுள்ள மக்களில் சுமார் 10 கோடி பேரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே இலக்காகும்.

ஆனால் மோடி அரசின் இத்திட்டத்தில் இணைய ஒடிசா, டெல்லி, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மறுத்துவிட்டன. இந்நிலையில் இந்த திட்டத்தில் விரைவில் இணையுமாறு, மத்திய சுகாதார துறை அமைச்சரான ஹர்ஷ்வர்த்தன் மேற்கண்ட மாநிலங்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக 4 மாநிலங்களுக்கும் அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
ஆனால் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், டெல்லி இணையாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் அந்த மாநிலங்களில் இருந்தெல்லாம் நோயாளிகள் டெல்லிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கு என்ன அர்த்தம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் அவர்களுக்கு பிடிக்கவில்லை அல்லது உதவவில்லை என்று தானே கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். எனவே மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
டெல்லியை பற்றி மத்திய அரசு கவலைப்பட தேவையில்லை. எங்கள் மாநில மக்களை நாங்கள் கவனமாக பார்த்து கொள்வோம் என்றார். மேலும் பேசிய அவர், சமுதாய சாதிக்கணக்கெடுப்பில் இடம்பிடிக்கும் மக்களுக்கு மட்டுமே மத்திய அரசின் இலவச காப்பீடு வழங்கப்படுகிறது.
மக்களில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளித்து மற்றவர்களிடம் பணம் பறிப்பதில் ஆம் ஆத்மி அரசுக்கு உடன்பாடில்லை. எனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை காட்டிலும் சிறப்பான திட்டத்தை, டெல்லி அரசு மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மாநில சுகாதார துறை அமைச்சர் பேச்சுக்கு, டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மிகவும் சிறப்பான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, வேண்டுமென்றே ஆம் ஆத்மி குறை கூறுவதாக சாடினார். கெஜ்ரிவால் அரசை மக்கள் விரோத அரசு என உணர்ந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். ஆம் ஆத்மி அரசுக்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications