மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரைக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறி
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதற்கட்ட தேர்தல் தொடங்குகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி 8ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
தமிழகத்தை விட பெரிய மாநிலம் மேற்கு வங்கம். அங்கு 294 தொகுதிகள் உள்ளன. கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்க மாநிலத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (டி.எம்.சி) தலைவரான மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முதன்முதலில் 2011ம் ஆண்டு மே 20ம் தேதியன்று மேற்கு வங்க முதல்வரானார். 2016ம் ஆண்டில் மீண்டும் மாநில மக்களின் ஆதரவை பெற்று இரண்டாவது முறையாக முதல்வரானார்.

மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க கடும் முயற்சி செய்து வருகிறார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை கைப்பற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இன்றைய தினம் 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாட்டில் ஒரே கட்டங்களாக வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27 ஆம் தேதி தொடங்குகிறது. 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும். 3ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதியும், 4ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 10 ஆம் தேதியும் நடைபெறும். 5ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17ஆம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 22 ஆம் தேதியும் நடைபெறும்.
7ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும் 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில்தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் அதிருப்தி அடைந்துள்ளது. அதனால், 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மாநில சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெற்றது. இந்த ஆண்டு 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டசபைத் தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும் மம்தா பானர்ஜி மீண்டும் வெற்றி பெற்று அரியணையை கைப்பற்றுவாரா பார்க்கலாம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications