மம்தாவுக்கு அதிர்ச்சி தோல்வி.. மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக! Matrize எக்சிட் போல்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இப்போது Matrize நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அது மேற்கு வங்க பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுக்கால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படுவதாக அந்த எக்சிட் போல் முடிவுகள் கூறியுள்ளன.
இந்தியாவே உற்றுநோக்கிய மேற்கு வங்கத் தேர்தல் போர்க்களம் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்குப் பிரம்மாண்டமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்தச் சூழலில் வெளியாகியுள்ள Matrize கணிப்புகள், மேற்கு வங்கத்தில் ஒரு மிக பெரிய அரசியல் மாற்றம் காத்திருப்பதாக கூறியுள்ளது.

மொத்தம் 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்கச் சட்டசபையில், ஆட்சியைப் பிடிக்க 148 இடங்கள் தேவை.
இதில் Matrize கணிப்பின்படி, பாஜக 146 முதல் 161 இடங்கள் வரை பிடித்துப் பெரும்பான்மையைத் தொடும் எனக் கூறப்படுகிறது. அக்கட்சியின் வாக்கு வங்கி 42.5 சதவீதமாக உயரும் எனத் தெரிகிறது.
மறுபுறம் கடந்த 15 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருக்கும் , மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் 125 முதல் 140 இடங்களை மட்டுமே பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாக்கு சதவீதம் 40.8-ஆகக் குறைய வாய்ப்புள்ளது.
இந்தக் கணிப்பு உண்மையானால், 2011 முதல் வங்காளத்தை ஆண்டு வரும் 'தீதி' மம்தா பானர்ஜியின் சாம்ராஜ்யம் முடிவுக்கு வரும். இது சமீபத்திய இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியாகக் கருதப்படும்.












Click it and Unblock the Notifications