குஷன் சீட் + மின்னல் வேகம்.. வந்தாச்சு நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில்! என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா
டெல்லி: இந்தியாவின் முதலாவது வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத்- பூஜ் இடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தான் வந்தே மெட்ரோ ரயிலின் சிறப்புகள் என்னென்ன? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்தமாநிலமான குஜராத்துக்கு வந்துள்ளார். அகமதாபாத்தில் சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் அடக்கும். குறிப்பாக நம் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்த முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் கட்ச் மாவட்டத்தின் பூஜ் இடையே இயங்க உள்ளது. ஏற்கனவே சோதனை ஓட்டம் வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் தான் இன்று அறிமுகம் செய்யப்படும் வந்தே மெட்ரோ ரயிலின் சிறப்புகள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இன்று செயல்பாட்டுக்கு வரும் வந்தே மெட்ரோ ரயில் அகமதாபாத் - பூஜ் இடையே இயங்க உள்ளது. மொத்தம் 360 கிலோமீட்டர் தொலைவை 5 மணிநேரம் 45 நிமிடங்களில் கடக்க உள்ளது.
இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயங்க உள்ளது. பூஜ் பகுதியில் இருந்து கிளம்பும் ரயில் சனிக்கிழமையும், அகமதாபாத்தில் இருந்து புறப்படும் ரயில் ஞாயிற்றுக்கிழமையும் இயங்காது. மற்ற அனைத்து நாட்களிலும் இருமார்க்கமாக இந்த ரயில் இயங்கும். இந்த ரயில் பூஜ் ரயில் நிலையத்தில் காலை 5.05 மணிக்கு புறப்ட்டு காலை 10.50 மணிக்கு அகமதாபாத்தை வந்தடையும். மறுமார்க்கமாக மாலை 5.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11.20 மணிக்கு பூஜ் ரயில் நிலையத்தை அடையும்.
இந்த ரயில் அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க உள்ளது. இந்த ரயில் அஞ்சார், காந்திதாம், பாசாவ், சாமகியாலி, ஹால்வாட், த்ரங்கத்ரா, விரம்காம், சாந்லோடியா, சபர்மதி மற்றும் காலுபார் (அகமபாத் ஸ்டேஷன்) ஆகிய நிலையங்களில் நின்று செல்ல உள்ளார்.
இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டது. மக்கள் அனைவரும் முன்பதிவு இன்றி ஏறி பயணம் செய்யலாம். அதாவது ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக கூட டிக்கெட் வாங்கி மக்களால் பயணிக்க முடியும். இதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.30 ஆக இருக்கிறது. அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.430 ஆக உள்ளது. வாராந்திர மற்றும் பதினைந்து நாட்கள், மாதாந்திர சீசன் பாஸ்கள் உள்ளன.
மொத்தம் ரயிலில் 1,150 இருக்கை வசதிகள் உள்ளது. குஷன் சோபா வகையில் இருக்கைகள் உள்ளன. அதோடு ரயிலில் 2,058 பயணிகள் நின்றபடி பயணிக்கலாம். ஆட்டோமெட்டிக் கதவு, ரயிலின் இருபுறங்களிலும் இன்ஜின்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications