இந்தியாவின் தேசிய மலர் எது... நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த ஷாக் பதில்
Recommended Video
டெல்லி: இந்தியாவின் தேசிய மலர் என்பது பொதுவாக நாம் தாமரையைத் தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிக்கையும் இதுவரை வெளியிடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பள்ளிகளில் பாடங்களில் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்றும், இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும், இந்தியாவின் தேசிய பறவை மயில் என்றும், இந்தியாவின் தேசிய மரம் ஆழமரம் என்றும் படித்திருப்போம்.

ஆனால் இப்போது தேசிய மலர் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
"தேசிய விலங்காக புலியையும், தேசிய பறவையாக மயிலையும் அங்கீகரித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த 2011ல் அரசாணை வெளியிட்டுள்ளது. தேசிய மலர் என எதையும் அரசு அங்கீகரிக்கவில்லை" என்றார்.
இதன் மூலம் இதுவரை தேசிய மலர் தாமரை என பொதுவாக நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு விளக்கத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications