எப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்
டெல்லி: தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறை நலிவடைவதாக தருமபுரி எம்.பி. செந்தில்குமார் வேதனை தெரிவித்தார்.
லோக்சபா விவாதத்தில் பங்கேற்ற தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில் குமார் பேசுகையில், "இப்போது SEZ அவசர சட்டத்தை நிறைவேற்றுவதற்கான அவசரம் என்ன? முந்தைய சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு சொந்தமான அறக்கட்டளைகளில் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது.

அரசுக்கு நெருக்கமான மற்றும் சொந்த நலன்களை காப்பாற்றும் வகையிலான சிலருக்கு ஆதரவாக, இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக என்ற சந்தேகங்கள் உள்ளன" என்றார்.
செஸ் எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிகளில், அரசு சலுகையுடன், அறக்கட்டளைகளை அமைத்துக்கொள்ள வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைப்பற்றிதான் செந்தில்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
செந்தில் குமார் மேலும் பேசுகையில், "ஒரு காலத்தில் ஆட்டோமொபைல் மையமாக இருந்தது தமிழகம். இப்போது ஆட்டோமொபைல் தொழில்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. தற்போதைய மாநில அரசின் கீழ், தமிழகத்தில் தொழில் துவங்குவது என்பது கஷ்டமாக மாற்றப்பட்டுள்ளது" என்றார்.
செஸ் சட்டத் திருத்தத்தின் படி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில், அறக்கட்டளைகளின், முதலீடுகளை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 'நபர்' என்ற வரையறையில் 'அறக்கட்டளைகளை' சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம் (திருத்தம்) மசோதா 2019 ஐ அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. முந்தைய மோடி அரசால் மார்ச் மாதத்தில் இதுதொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் புதிய அரசு பதவிக்கு வந்துள்ளதால், அந்த அவசர சட்டம் காலாவதியாகிவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications