ஹிட் அடித்த வந்தே பாரத்.. அடுத்து ரெடியாகும் "வந்தே பாரத் மெட்ரோ.." என்ன வித்தியாசம்! என்ன ஸ்பெஷல்
டெல்லி: வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மிக விரைவில் வந்தே பாரத் மெட்ரோவை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.
உலகெங்கும் மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிகப்படியான ஊழியர்களைக் கொண்ட அமைப்பாகவும் இந்தியன் ரயில்வே இருக்கிறது.

உட்கார பெரிய இடம், கொஞ்ச நேரம் நடக்கலாம், கழிப்பறை என்று பல்வேறு வசதிகள் இருக்கும் நிலையில், ரயில் பயணங்களையே பலரும் விரும்புகிறார்கள். இதன் காரணமாகவே பல மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விடுகிறது.
வந்தே பாரத்: நாட்டின் ஒரு பகுதியில் இருந்து எந்தவொரு பகுதிக்கும் எளிதாகச் சென்று சேரும் வகையில் மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு இடையேயும் ரயில் சேவை இருக்கவே செய்கிறது. இருப்பினும், தொழில்நுட்ப ரீதியாகவும் வசதிகள் ரீதியாகவும் இந்தியன் ரயில்வே பின்தங்கி இருப்பதாகப் புகார்கள் இருந்து கொண்டே இருந்தது. இதனால் நடுத்தட்டு வர்க்கத்தினரும் விமானங்கள் பக்கம் போவதாகச் சொல்லப்படுகிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியது. முற்றிலும் குளிர்சாதன வசதி, தானியங்கி கதவுகள், அதிவேக வைபை வசதிகளைக் கொண்ட ரயிலாக இந்த வந்தே பாரத் ரயில்கள் இருக்கிறது. இப்போது நாட்டில் சுமார் 15 வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், நாடு முழுக்க 150 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை- பெங்களூர்- மைசூர், சென்னை கோவை என இரு வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்கப்படுகிறது. இந்த இரண்டிற்கும் அட்டகாசமான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே வந்தே பாரத் குறித்து அட்டகாசமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தாண்டு இறுதிக்குள் வந்தே பாரத் மெட்ரோவை அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

வந்தே பாரத் மெட்ரோ: இந்த வந்தே பாரத் மெட்ரோ குறைந்த விலையில் முக்கிய நகரங்களை இணைக்கும் மெட்ரோவாக இருக்கும். 100 கிமீ குறைவான தூரத்தில் இருக்கும் முக்கிய நகரங்களை இணைக்கும் குறுகிய தூர மெட்ரோ ரயில் நெட்வொர்க்காக வந்தே பாரத் மெட்ரோ இருக்கும்.
உள்ளூர் ரயில்களில் நெரிசலைக் குறைக்க வந்தே பாரத் மெட்ரோ உதவும்.. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த வந்தே பாரத் மெட்ரோ தயாராகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். வந்தே பாரத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்தே இந்த வந்தே பாரத் மெட்ரோவுக்கான ஐடியா வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு இறுதியில் வந்தே பாரத் மெட்ரோ பயன்பாட்டிற்கு வர உள்ளது.
வந்தே மெட்ரோ 100 கிலோமீட்டருக்கும் குறைவாக இருக்கும் நகரங்களுக்கு இடையே இயங்கும். அதாவது இது வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் குறுகிய தூர வெர்ஷனாக இருக்கும். ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை இயக்கப்படுவது போல இதன் ரூட்கள் தேர்வு செய்யப்படும். இதன் மூலம் விரைவாக ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்ல முடியும்.
இதில் மெட்ரோ ரயிலைப் போன்று எட்டு பெட்டிகள் இருக்கும். சாதாரண வந்தே பாரத் ரயில்கள் 16 பெட்டிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை தேடும் இளைஞர்கள், மாணவர்கள் நேரத்தை இந்த வந்தே பாரத் மெட்ரோ கணிசமாக மிச்சப்படுத்தும்.
இதற்காக எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களுக்கான ரேக்குகளின் உற்பத்தியை விரைவில் தொடங்குமாறு ஐசிஎஃப் தொழிற்சாலையிடம் இந்தியன் ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications