Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயநாடு தொகுதியில் களமிறங்கும் பிரியங்கா காந்தி.. எடுத்தவுடன் முதலில் சொன்னது இதுதான்.. அடடே சூப்பர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற நிலையில், இரண்டில் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா சூழல் ஏற்பட்டது. அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்துள்ளதால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 232 இடங்களில் வென்றது. இதில் காங்கிரஸ் கட்சி 99 சீட்களில் வென்று அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

rahul gandhi Priyanka Gandhi lok sabha election 2024 2024

காங்கிரஸின் ராகுல் காந்தி இந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார்.

இரண்டு தொகுதிகள்: இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார். இரண்டிலும் வெற்றி பெற்றதால் ராகுல் காந்தி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் நமது நாட்டில் உள்ள தேர்தல் விதிகளின்படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால், இரண்டிலும் வென்றால் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அதுவும் தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களில் எந்த தொகுதியை தக்க வைக்கலாம் என்பது குறித்த முடிவை எடுக்க வேண்டும். இந்த காலக்கெடு நாளை முடிகிறது. இதனால் ராகுல் காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். ஏற்கனவே, அவர் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்தித்தார்.

ராஜினாமா: மேலும், மூத்த தலைவர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.. இது தொடர்பான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். ரேபரேலி தொகுதியைத் தக்க வைக்கும் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இணைந்து வெளியிட்டனர்.

இப்போது வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும். இதற்கிடையே இந்த இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதிலும், அவர் நேரடியாகத் தேர்தலில் களமிறங்குவது இதுவே முதல்முறையாகும்.

பிரியங்கா காந்தி: வயநாடு காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "வயநாடு தொகுதிக்கு எம்பியாக வாய்ப்பு கிடைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. ராகுல் காந்தி இல்லாமல் போய்விட்டாரே என்று வயநாடு மக்களை உணர விடமாட்டேன். வயநாடு தொகுதிக்காக ராகுல் காந்தி எப்போதும் இருப்பார். நான் வயநாடு மக்களுக்காக கடினமாக உழைப்பேன்.. அந்த தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுப்பேன்.

இருவரும் எம்பி தான்: ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிக்கும் எனக்கும் கூட நீண்ட உறவு இருக்கிறது. இதை நான் என்றும் மறக்கவே மாட்டேன். ரேபரேலி மற்றும் வயநாடு என இரண்டு தொகுதி மக்களுக்காகவும் நான் இருப்பேன். நானும் ராகுலும் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+