Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியை உடைத்தால்.. நாடு முழுக்க காங்கிரஸ் கூட்டணிகள் உடையும்.. சுதாரித்த ராகுல்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டால், அதன் தாக்கம் தமிழ்நாட்டோடு நிற்காது. தேசிய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்திய அரசியலின் அடிப்படைகளையே மாற்றிவிடும் என்று காங்கிரஸ் தேசிய தலைமை அஞ்சுவதாக கூறப்டுகிறது.

திமுக வெளியேறினால், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், சரத் பவார் இந்தியா கூட்டணியில் நீடிப்பது சந்தேகமே. அவர்களுக்கு இக்கூட்டணி வெறும் தேர்தல் கணக்கீடு, உணர்வுபூர்வமானது அல்ல. தெற்கின் முக்கிய தூணான திமுகவை இழந்த பலவீனமான காங்கிரஸ், ஒரு சொத்தல்ல, சுமையே என்று மற்ற கட்சிகள் கருதக்கூடும்.

congress

திமுகவை சீண்ட வேண்டாம் - காங்கிரஸ் யோசனை

இதன் விளைவுகள் மிகத் தீவிரமானவை. 'இந்தியா' கூட்டணியில் உள்ள பிராந்தியக் கட்சிகள் கூட்டாக வென்ற சுமார் 100 தொகுதிகள், அடுத்த தேர்தலில் இந்த 100 இடங்களுக்கு சிக்கல் ஏற்படும். ஒருங்கிணைப்பு இல்லாததால் வாக்குகள் பிளவுபட்டு, மும்முனைப் போட்டிகள் உருவாகி, எதிர்க்கட்சி அரசியல் விரைவாகச் சிதறிவிடும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும். திமுகவின் ஆதரவின்றி, தற்போதுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் யாரும் மீண்டும் நாடாளுமன்றம் செல்வது இயலாதது. இந்தக் கூட்டணி வெறும் கூடுதல் பலம் அல்ல, அதுவே காங்கிரஸின் உயிர்நாடி.

இந்திய அரசியலில், கூட்டணிகள் என்பது உயிர்வாழும் கட்டமைப்புகள். ஒரு முக்கிய தூண் அகற்றப்பட்டால், முழு கூரையும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. திமுக வெளியேறினால், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், சரத் பவார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவார்கள்.

தெற்கின் முக்கிய தூணான திமுகவை இழந்த பலவீனமான காங்கிரஸ் மற்ற தொகுதிகளில் கூட்டணியை இழக்கும். இதை மனதில் வைத்தே திமுக உடன் கூட்டணியை தொடரலாம் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாம்.

காங்கிரஸ் கூட்டணி

டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த முக்கிய கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஆளும் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி தொடர விரும்புவதாகத் தெளிவுபடுத்தினர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் மட்டுமே அமைச்சர் பதவிகளைக் கோரும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சியின் தேசிய தலைமையகமான இந்திரா பவனில் நான்கரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, வி. வசந்த், பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் மெகா கூட்டணி

தற்போது, காங்கிரஸ் தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மாநில அளவில் அதிகாரப் பகிர்வு இல்லை. வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் அதிகாரப் பங்கைக் கோரும் என சமீப நாட்களில் யூகங்கள் எழுந்தன. இந்த விவாதம் தீவிரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது.

இருப்பினும், தி.மு.க. தலைவரும் தமிழக அமைச்சருமான ஐ. பெரியசாமி, முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டணிப் கட்சிகளுடன் எந்த அமைச்சர் பதவியையும் பகிர்ந்து கொள்ள மாட்டார் என்று முன்னதாகவே திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது கூட்டணியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்க, சில காங்கிரஸ் தலைவர்கள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்க்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர்.

ஆனால், கூட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர்கள் TVK உடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்தனர். தி.மு.க.வுடனே தொடர்வதற்கு வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தனர். மேலும், தி.மு.க. பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கோரப்படும் என்றும், அதிகாரப் பகிர்வு கோரிக்கையை தற்காலிகமாக அவர்கள் ஒதுக்கி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+