ஜம்முனு வண்டி ஓட்டும் ஜப்பான்.. இந்தியாவின் நிலை ரொம்பவே மோசம்.. எந்த ரேங்க்.. ஏன் ஆபத்து
சிறந்த டிரைவிங் பண்புகளை கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லி: பல்வேறு நாடுகளில் வாகனம் ஓட்டும் பழக்கம் எப்படியிருக்கிறது என்பதை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் ஜப்பான் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து எந்த நாடுகள் உள்ளன. இந்தியாவுக்கு என்ன இடம் என்பதைப் பார்க்கலாம்.
மத்திய அரசு எக்ஸ்பிரஸ் வே, நெடுஞ்சாலை என்று பல்வேறு சாலைகளைக் கொண்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் சாலைப் பயணம் இன்னும் பாதுகாப்பான ஒன்றாக மாறவில்லை.
இந்தியாவில் கடந்த 2021இல் மட்டும் 4.12 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில்1.53 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 3.8 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். அந்தளவுக்குத் தான் நமது சாலைகள் பாதுகாப்பாக உள்ளது.

விபத்துகள்
நமது நாட்டில் மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் சாலைப் பயணங்களில் அதிக விபத்துகள் ஏற்படவே செய்கிறது. இதைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல விதங்களில் முயன்று வருகிறது. அதிவேகத்தில் இயங்கப்படும் வாகனங்களே உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளை ஏற்படுத்துகிறது. இதனால் வாகனங்கள் அதிவேகத்தில் இயங்குவதைத் தடுக்கவே ஐரோப்பிய நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவுக்குப் பலன் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

ஜப்பான்
உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் வாகனம் ஓட்டும் பழக்கம் எப்படியிருக்கிறது என்பதை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் உலகில் தலைசிறந்த டிரைவிங் பண்புகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து டென்மார்க், ஸ்வீடன் நாடுகளைக் கொண்ட நார்டிக் நாடுகள் அடுத்த இடத்தில் உள்ளன. அதேநேரம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

இந்தியா
கம்பேர் தி மார்கெட் என்ற இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில், மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வில் மொத்தம் 50 நாடுகளில் ஓட்டுநர்களை ஆய்வு செய்து.. போக்குகள், போக்குவரத்து விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த சிறந்த ஓட்டுநர் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாடு, சாலை நிலை, அனுமதிக்கப்பட்ட உள்ள ஆல்கஹால் அளவு உள்ளிட்டவையும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மார்க் எவ்வளவு
இந்த ஆய்வின்படி, மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்திலும், பெரு மற்றும் லெபனான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகின் சிறந்த ஓட்டுநர்கள் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பான் நாட்டிற்கு 4.57 மார்க் கிடைத்துள்ள நிலையில், இந்தியாவுக்கு 2.34 மார்க் மட்டுமே கிடைத்துள்ளது. ஜப்பானுக்கு அடுத்து நெதர்லாந்து இரண்டாவது இடத்திலும், நார்வே, எஸ்டோனியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

காரணம்
இந்தியாவில் சில ஆண்டுகளாகவே சாலைப் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இதனால் சாலை விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து சட்டங்களைக் கடுமையாக்குவது, அபராத தொகையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதேநேரம் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பயிற்சி, சாலை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவையும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முக்கியமான காரணங்கள் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

நடவடிக்கை
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை.. அதிகரிக்கும் வாகன எண்ணிக்கை ஆகியவை விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தொடர்ச்சியான நடவடிக்கை தேவை என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications