கொரோனா தடுப்பில் அஜாக்கிரதை கூடாது... தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு WHO அறிவுறுத்தல்..!
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு போதும் கைவிட்டுவிட வேண்டாம் என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மற்ற நாடுகளை காட்டிலும் கொரோனா பரவலின் வீரியம் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவதாக எண்ணி அதன் தடுப்பு பணிகளில் அஜாக்கிரதை வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனாவை முழுமையாக இன்னும் முறியடிக்காத நிலையில் தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தொற்று குறைவதாக கருதி கவனக்குறைவாக செயல்பட வேண்டாம் எனவும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங் கொல்கத்தாவில் அளித்த பேட்டியில், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியிருப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சமூக இடைவெளி, சுகாதாரம் பேணுதல், கொரோனா விழிப்புணர்வு உள்ளிட்டவைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு 6 முதல் 8 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் இதற்காக மெத்தனமாக இருந்துவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications