Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்லைனில் வந்த பார்சல்.. ஆசை ஆசையாக பொட்டலத்தை பிரித்தால்.. ஹய்யயோ வித்தியாசமா இருக்கே? ஓ மை காட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார் ஒரு டாக்டர்.. பார்சலை திறந்து பார்த்துமே அதிர்ச்சியாகிவிட்டார்.. அதேபோல, ஆன்லைனில் ஃபேமிலி ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த பெண்ணும், பார்சலை திறந்ததுமே அதிர்ச்சியாகிவிட்டார்.. என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. பிரெண்டன் ஃபெராவ் (Dr. Brendan Ferrao- 27) என்ற டாக்டர், ஆன்லைனில் கோன் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார்.

ஐஸ்கிரீம்: கொஞ்ச நேரத்தில் அவர் கேட்ட ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டது.. உடனே அதீத ஆர்வத்துடன் அந்த ஐஸ்கிரீமை எடுத்துவாயில் வைத்தார். அப்போது ஏதோ ஒன்று பெரிதாக வாயில் தென்படுவதாக உணர்ந்துள்ளார்..

Delhi Ice Cream

ஒருவேளை, ஐஸ்கிரீமில் பெரிய கொட்டை இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.. அதற்காக இவ்வளவு பெரிய கொட்டைகளை ஐஸ்கிரீமில் சேர்க்க மாட்டார்களே என்று நினைத்து, அதை விழுங்காமல், வாயிலிருந்து எடுத்து பார்த்துள்ளார்.

பரிசோதனை: அப்போதுதான், அது "மனித விரல்" என்று தெரியவந்துள்ளது.. இதைப்பார்த்து அலறியடித்துக்கொண்டு புகார் கொடுக்க சென்றார்.. அந்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனத்தினரிடம் விசாரணை நடக்கிறது.. ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை, டெஸ்ட்டுக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. அந்த விரல், சுமார் 2 செமீ நீளத்துக்கு இருந்ததாம்.
இந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், டெல்லியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. உத்தரபிரதேசத்தின் நொய்டாவில், செக்டர் - 12 -ல் தீபா என்ற பெண் வசித்து வருகிறார்.. இவர் "பிளிங்கிட்" என்ற ஆன்லைன் ஆப் மூலம் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருக்கிறார். தன்னுடைய குடும்பத்தினர் எல்லாருமே சாப்பிடும்வகையிலான "பேமிலி பேக்" என்ற ஐஸ்கிரீமை நேற்று ஆர்டர் செய்திருக்கிறார்.

பார்சல்கள்: இந்த ஐஸ்கிரீம் அமுல் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.. சிறிது நேரத்தில், ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டது.. அந்த ஐஸ்கிரீமை பிரித்து பார்த்தால், பூரான் கிடந்திருக்கிறது.. இறந்த நிலையில் ஐஸ்கிரீமின் மேலேயே கிரீமுக்கு பதில் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்... உடனே இதனை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டார் தீபா.

அடுத்த நிமிடமே, சம்பந்தப்பட்ட பிளிங்கிட் நிறுவனம், தீபா வாங்கிய ஐஸ்கிரீமிற்கான பணத்தை திருப்பித் தந்தது.. ஆனால், பூரான் வீடியோ வைரலாகிவிட்டதால், அதைப்பார்த்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தீபாவிடம் விசாரணை நடத்தியதுடன், ஐஸ்கிரீம் அனுப்பப்பட்ட நிறுவனத்திற்குள்ளேயே அதிரடியாக நுழைந்தார்கள்..

விசாரணை: அங்கு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீம்களின் மாதிரிகளை எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பினார்கள்.. ஆனால், ஐஸ்கிரீம் தயாரிக்குமிடத்தை பார்த்து அதிகாரிகள் முகம் சுழித்தனர்.. ஐஸ்கிரீம் வைக்கப்பட்டிருந்த இடம் சுகாதாரமாக இல்லை என தெரிகிறது.. எனவே அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அமுல் ஐஸ்கிரீம் நிறுவனமும், பிளிங்கிட் நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+