Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடிக்கிறது.. குறையவில்லை.. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து நீடிக்கிறது; கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது

WHO warns Covid-19 Pandemic isn’t slowing down

உலக சுகாதார அமைப்பின் 6 பிராந்தியங்களில் 5-ல் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்காவில் கொரோனா மரணங்கள் 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் 5,00,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 9,300 பேர் மரணம் அடைந்துள்ளனர். டெல்டா வகை கொரோனா வைரஸ், லாக்டவுன் தளர்வுகள், கொரோனா தடுப்பூசி போடுவதில் சுணக்கம் உள்ளிட்டவைதான் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கின்றன.

டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவுகிறது. மிகவும் ஆபத்தான இந்த வைரஸால்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அந்த நபருக்கு நெருக்கமான 3 முதல் 8 பேருக்காவது தொற்றும்.

கொரோனா தடுப்பூசி போடுவதால் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்னமும் உலக நாடுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலைமை இருந்து வருகிறது.

லாக்டவுன்களில் தளர்வுகளை செயல்படுத்தும் போது நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மிக முக்கியமானது. இவ்வாறு செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+