Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா திரும்ப மறுக்கும் 27 பயணிகள்.. பிரான்ஸில் 4 நாட்கள் நின்ற "கழுதை" விமானம்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரான்ஸ் நாட்டில் தடுத்து நிறுத்திவைக்கப்பட்ட இந்திய விமானம், மும்பையில் தரையிறங்கிய போதிலும், 27 இந்தியர்கள் நாடு திரும்பவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா என்ற நாட்டிற்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் வத்ரி விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பத் தரையிறங்கியது.

 Why 27 Indians stayed back in France even though the grounded flight returned to India

அப்போது அதில் ஆள் கடத்தல் நடந்ததாகத் தகவல் கிடைத்த நிலையில், விமானத்தைத் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 4 நாட்கள் வரை அதிகாரிகள் விமானத்தில் விசாரணை நடத்தினர்.

27 இந்தியர்கள் திரும்பவில்லை: விமானத்தில் 300+ பேர் இருந்த நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது. பாரீஸுக்கு அருகே வாட்ரி விமான நிலையத்தில் இந்த விமானம் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது. இப்போது இன்று காலை 4 மணியளவில் அந்த ஏர்பஸ் ஏ340 விமானம் 276 பயணிகளுடன் மும்பையில் தரையிறங்கியுள்ளது. இருப்பினும், விமானத்தில் இருந்த மற்ற 27 பேர் இந்தியா திரும்பவில்லை.

என்ன காரணம்: அவர்கள் இந்தியா வர அனுமதி தரப்பட்ட போதிலும், அவர்கள் இந்தியா திரும்பவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நாடு திரும்பாதவர்களில் 5 சிறார்கள் உட்பட 20 பேர் பிரான்ஸில் அகதிகளாக இருக்கப் புகலிடம் கோரியுள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் இப்போது பாரீஸ் விமான நிலையத்தில் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் எத்தனை பேர் இந்தியர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை..

சர்வதேச சட்டத்தின் கீழ் அகதிகளாகப் புகலிடம் கோருபவர்களைச் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப முடியாது. இந்த 25 பேர் போக இன்னும் இரண்டு பேரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைத்திருந்தனர். ஆள் கடத்தல் விவகாரத்தில் அந்த இரண்டு பேரைத் தான் பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இருந்தனர். அதேநேரம் அவர்களும் கூட அவர்கள் பிரான்சிலிருந்து வெளியேற அனுமதி பெற்றுவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்று பிரான்ஸ் போலீசார் நம்பியதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கறிஞர் சொல்வது என்ன: இது குறித்து அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், "இந்த வழக்கில் வெளியே இருந்து அழுத்தம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக ஊடகங்கள் ஒரு வித அழுத்தத்தை ஏற்படுத்தினர். இதனால் விசாரணை முறையாக நடக்குமா என்பதில் சிரு சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும், அந்த அழுத்தங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் நீதிபதி இந்த வழக்கை விசாரித்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

இவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயல்வோர் பொதுவாக 'கழுதை விமானங்கள்' அதாவது ஆங்கிலத்தில் 'donkey flights' என்ற நீண்ட விமான ரூட்டை எடுப்பார்கள். அதன்படி முதலில் ரூல்ஸ் குறைவாக இருக்கும் நாடுகளுக்குச் செல்லும் இவர்கள் அங்கிருந்து அமெரிக்காவுக்கு எளிதாகச் செல்வார்கள்.

அப்படி சட்ட விரோதமாக நுழைய முயல்வோர்களே இப்படி நிகரகுவா நாட்டிற்குச் செல்ல முயன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிகரகுவா நாட்டிற்குச் சென்றுவிட்டால் போதும். அதன் பிறகு அங்கிருந்து அமெரிக்காவுக்குச் சாலை மார்க்கமாகவே கடந்துவிடலாம் என்பதால் அங்கே செல்ல முயன்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+