"இந்தியா” கூட்டணியை உடைக்க பிரசாந்த் கிஷோர் சதி ? டெல்லியில் கெஜ்ரிவால்- மமதா மருமகன் சந்திப்பு!
டெல்லி: "இந்தியா" கூட்டணி கூட்டம் மும்பையில் நடைபெறும் நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை அபிஷேக் பானர்ஜி சந்தித்ததுதான் ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
பிகே தலையீடு: "இந்தியா" கூட்டணியின் உள் விவகாரங்களில் பிரஷாந்த் கிஷோர் தலையிட்டு கருத்து தெரிவித்து வருவது சர்ச்சையாகி வருகிறது. "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நிதிஷ்குமாரை தேர்வு செய்யக் கூடாது; அதற்கு பதில் திமுகவின் தலைவரான தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது மமதா பானர்ஜிக்கு கொடுக்கலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தார் பிரசாந்த் கிஷோர்.

அபிஷேக் பானர்ஜி சந்திப்பு: இதனைத் தொடர்ந்து அபிஷேக் பானர்ஜியை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருவரும் பேசியது என்ன என்கிற விவரம் வெளியாகவில்லை. ஆனால் பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பை தொடர்ந்து திடீரென டெல்லி சென்று அரவிந்த் கெஜ்ரிவாலை அபிஷேக் பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கெஜ்ரிவாலை ஏன் சந்தித்தார்?: கடந்த சில நாட்களுக்கு முன்னர், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அபிஷேக் பானர்ஜியை கைது செய்ய மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டுகிறது என மமதா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார். இப்போது அபிஷேக் பானர்ஜி தனி ஆவர்த்தனமாக அரவிந்த் கெஜ்ரிவாலை பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின் பேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பாஜகவின் சதி?: இந்தியா கூட்டணி நிலைத்துவிடக் கூடாது என்பதுதான் பாஜகவின் பெருவிருப்பம். இதனை செயல்படுத்தும் வகையில் "இந்தியா" கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பிரசாந்த் கிஷோர் கருத்துகளையும் கூறி வருகிறார். "இந்தியா" கூட்டணியின் தலைமை செயலகத்தை சிபிஎம் கட்சியின் டெல்லி அலுவலகத்தில் அமைக்கக் கூடாது என்பதில் மமதா பானர்ஜி உறுதியாக இருக்கிறார். ஆனால் கூட்டணியில் தங்கள் இருப்பை உறுதி செய்ய அது ஒன்றுதான் ஒரே வழி என்பதில் இடதுசாரிகள் உறுதியாக உள்ளனர். இந்த குழப்பத்தை பிரசாந்த் கிஷோர் அறுவடை செய்யலாம் என கணக்குப் போடுகிறாரா? என்கிற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications