ஜெயலலிதா ஸ்டைலில் மோடி ஆட்சி.. இந்தியாவே வளர்ந்துள்ளது.. டெல்லியில் புகழ்ந்து தள்ளிய எடப்பாடி!
டெல்லி: டெல்லியில் நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். இந்நிலையில் தான் பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக வியூகம் வகுத்து உள்ளன. அதன்படி பெங்களூரில் 2வது கட்டமாக 2 நாள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து INDIA என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன. I-N-D-I-A என்பதற்கு Indian National Developmental Inclusive Alliance என்பது தான் விரிவாக்கமாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என சொல்லலாம்.
இதற்கு போட்டியாக நேற்று டெல்லியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பிற கட்சி தலைவர்கள் என மொத்தம் 38 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தம்பித்துரை எம்பி, தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட மேலும் சிலர் பங்கேற்றனர். இந்நிலையில் தான் இன்று டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நான் பங்கேற்று கருத்துகளை தெரிவித்து உள்ளோம். ஜெயலலிதா, எம்ஜிஆர் தலைமையில் அதிமுக இருந்தபோது நாடாளுமன்றம் அல்லது சட்டசபை தேர்தலாக இருந்தாலும் ஒரேமாதிரியான கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைத்து நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறாம். இருபெரும் தலைவர்கள் வழியில் அதிமுக செயல்பட்டு வருகிறது.
தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கொரோனா பரவல் நேரத்தில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் பிரச்சனை என்பது ஏற்படாத வகையில் சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளார்.
மேலும் உலகளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி அதிகரித்துள்ளார். இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்பட்டு வருகிறார். தேசிய ஜனநாய கட்சி கூட்டணி நிச்சயமாக இந்தியா முழுவதும் 330 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறோம்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்?












Click it and Unblock the Notifications