எடப்பாடியே மோடியை பார்க்க முடியல.. தம்பிதுரை எப்படி பார்த்தாரு? ஓகே சொன்ன டெல்லி.. இதுதான் சீக்ரெட்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக கட்சியின் மூத்த எம்பி தம்பிதுரை பிரதமர் மோடியை நேரில் சந்தித்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர் எப்படி பிரதமர் மோடியை சந்தித்தார், இந்த சந்திப்பிற்கு பின் என்ன நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பின் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் டெல்லியில் இருந்தார்.

பயணத்தை பாதியில் முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பினார். டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி முதலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அப்போது பிரதமர் மோடியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கைகுலுக்கினார். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்த்தும் கைகுலுக்கினார். இதன் பின் திங்கள் கிழமை புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடியை தனியாக சந்திக்க முடியவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு திரும்பினார்.

நேரம் கொடுக்கவில்லை

நேரம் கொடுக்கவில்லை

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக மோதல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் எடப்பாடி பேச திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக உறவு, அதிமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எடப்பாடி பிரதமர் மோடியிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் எடப்பாடியை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் எடப்பாடி அணியை சேர்ந்த எம்பி தம்பிதுரையை சந்திக்க பிரதமர் மோடி நேரம் கொடுத்துள்ளார். எடப்பாடியே மோடியை பார்க்க முடியல.. தம்பிதுரை எப்படி பார்த்தாரு? என்ற விவாதம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பிவிட்ட நிலையில் டெல்லியில் பல முயற்சிகளை செய்து ஒருவழியாக மோடியை தம்பிதுரை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு எளிமையாக நடக்கவில்லை. மிக குறைந்த நேரமே இவர்கள் பேசினார்கள் என்று கூறப்படுகிறது.

எம்பிக்கள்

எம்பிக்கள்

டெல்லியில் உள்ள லோக்சபா எம்பி ரவீந்திரநாத் என்றாலும் சரி.. அதிமுகவின் மற்ற ராஜ்ய சபா எம்பிக்கள் என்றாலும் சரி.. பிரதமர் மோடிக்கு தனி அன்பு உண்டு. இவர்களிடம் பல மேடைகளில் நட்பாக பேசி இருக்கிறார். இந்த நிலையில்தான் தம்பிதுரையை சந்திக்க மோடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வென்றதற்கு தம்பிதுரை இதில் பிரதமர் மோடியை வாழ்த்தி இருக்கிறார்.

Recommended Video

    Modi- க்காக காத்திருக்கும் EPS,OPS : யாருக்கு கிடைக்கும் தரிசனம்?
    சீக்ரெட்

    சீக்ரெட்

    அதே சமயம் அதிமுகவில் நடந்த மாற்றங்கள், இரண்டு தரப்பு உறவு, எம்பி ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றியும் தம்பிதுரை பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மீட்டிங்கில் உண்மையில் பேசப்பட்டது என்ன என்பது மட்டும் ரகசியமாக இருக்கிறது. அதோடு அதிமுக மாஜி எம்பிக்கள் வருமானவரித்துறை, சிபிஐ ரெய்டில் சிக்கி இருப்பது பற்றியும் இதில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கலாம். எடப்பாடியின் தூதுவர் தம்பிதுரை செயல்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+