விசாரணைக்கு வந்த வத்ரா உடன் காரில் வந்தது ஏன்? பிரியங்கா காந்தி கொடுத்த சூப்பர் விளக்கம்!
அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வந்த ராபர்ட் வத்ராவுடன் துணைக்கு வந்தது ஏன் என்று பிரியங்கா காந்தி சூப்பர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கிற்காக அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வந்த ராபர்ட் வத்ராவுடன் தானும் துணைக்கு வந்தது ஏன் என்று பிரியங்கா காந்தி சூப்பர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மீது லண்டனில் சொத்து குவித்ததாக புகார் இருக்கிறது. இந்த வழக்கில் இவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் இன்று ராபர்ட் வத்ரா ஆஜரானார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அவர் வாக்குமூலம் அளித்தார்.

காரில் வந்தார்
இந்த நிலையில் வத்ராவுடன் அவரின் மனைவி பிரியங்கா காந்தியும், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்தார். அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மொத்தம் நான்கு கார்கள் வந்தது. ஒரு காரில் பிரியங்காவும், வத்ராவும் இருந்தனர். மூன்று காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர்.
|
உடனே சென்றார்
வத்ராவை அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிராப் செய்துவிட்டு பிரியங்கா காந்தி உடனே சென்றார். அங்கு கொஞ்சம் நேரம் கூட பிரியங்கா காந்தி காத்திருக்குவில்லை. பிரியங்கா காந்தியுடன் பாதுகாப்பிற்காக இரண்டு வாகனங்கள் திரும்பி சென்றது.
|
என்ன விமர்சனம்
இது தொடர்பாக சில விமர்சனங்கள் வைக்கப்பட்டது. பிரியங்கா காந்தி இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். இப்போது போய் அவர் இப்படி விசாரணைக்காகவெல்லாம் அலைகிறார். இது காங்கிரசின் பெயரை கெடுக்கும். பிரியங்காவின் இமேஜை மக்கள் மத்தியில் தவறாக கொண்டு செல்லும் என்று விமர்சனங்கள் எழுந்தது.

பதில்
இதற்கு பிரியங்கா காந்தி பதில் அளித்துள்ளார். எப்போதும் போல தனது ஸ்டைலில் ஒரே வார்த்தையில் அவர் பதில் அளித்துள்ளார். அதில் ''நான் எப்போதும் என் கணவருக்கு துணை நிற்பேன்''என்று சொல்லியபடி காரில் பறந்தார். இவரின் இந்த விளக்கம் காங்கிரஸ் தொண்டர்களை நிம்மதிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications