"இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தவறு!" ஐநாவில் தீர்மானத்திற்கு முதல்முறையாக ஆதரவாக வாக்களித்த இந்தியா! பின்னணி
டெல்லி: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சண்டை தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக். 7ஆம் தேதி தொடங்கிய மோதல் ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்திய நிலையில், இஸ்ரேல் அதற்குத் தீவிர பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

காசா மீது முழு வீச்சில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அடுத்துப் படையெடுப்பையும் ஆரம்பித்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.
ஐநா தீர்மானம்: இப்படி இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஐநாவிலும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி கடந்த அக். 28ஆம் தேதி ஐநா பொது சபையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் ஒன்று ஐநா பொதுச் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்தன. இருப்பினும், அமெரிக்கா, இந்தியா, கனடா உள்ளிட்ட 45 நாடுகள் இந்த தீர்மானத்தைப் புறக்கணித்தன.
இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தியா போர் நிறுத்தத்தை ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டனர். இந்தியா தனது நிலைப்பாட்டிற்கு அப்போதே விளக்கமளித்திருந்தது. அதாவது கடந்த அக். 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் எந்தவொரு கருத்தும் இல்லை என்று இந்தியா கூறியது. மேலும், ஹமாஸ் என்ற வார்த்தையே அதில் இல்லை என்றும் இதுவே தீர்மானத்தைப் புறக்கணிக்கக் காரணம் என்றும் இந்தியா கூறியிருந்தது.
இந்தியா ஆதரவு: இதற்கிடையே ஐநாவில் பொதுச் சபையில் மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கும் வகையில் ஐநா இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தது. கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலான் பகுதியிலும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
முதல்முறை: இந்த தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் வகையில் வாக்களித்தது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே யுத்தம் தொடங்கிய பிறகு, இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுப்பது இதுவே முதல்முறையாகும். இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 145 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 நாடுகள் வழக்கம் போல எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன..
ஏன் முக்கியம்: ஐநா சபையில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள இந்த நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை இந்தியா கண்டித்தாலும் கூட அங்கே இஸ்ரேல் பாலஸ்தீனம் என இரு நாடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையையே இந்தியா எடுத்துள்ளது. இஸ்ரேல் தனிநாடாக அறிவிக்கப்பட்ட போது உடனடியாக அதை அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த போதிலும், தூதரக உறவுகள் கடந்த 1992இல் தான் தொடங்கியது.

அதன் பிறகும் கூட பெரியளவில் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கம் ஏற்படவில்லை. கடந்த 2014க்கு பிறகே இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. கடந்த 2017இல் பிரதமர் மோடி டெல் அவிவ் நகருக்குச் சென்றார். இந்தியப் பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது அதுவே முதல்முறையாகும்.
இந்தியா நிலைப்பாடு: கடந்த அக். 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, ஹமாஸ் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார். அதை "பயங்கரவாத" நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். பிரதமரின் அந்த பேச்சில் பாலஸ்தீனம் குறித்து எந்தவொரு தகவல்களும் இல்லை. இரு தரப்பிற்கும் இடையே சண்டை தொடர்ந்த நிலையில், இந்தியா நடுநிலை நிலைப்பாட்டிற்கு வந்தது. இந்தச் சூழலில் தான் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா இப்போது வாக்களித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications