#FinanceMinisterMissing திடீரென டிரெண்டாக்குவது ஏன்? கதறியபடி நெட்டிசன்கள் வெளியிட்ட டுவிட்கள்
Recommended Video
டெல்லி: 2018-2019ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, வருமான வரி படிவத்துடன் தாக்கல் செய்தவற்காக காலக்கெடு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்காத நிலையில் நிதியமைச்சரை காணவில்லை #FinanceMinisterMissing #TaxAuditExtendToday என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
2018-2019ம் ஆண்டில் வருமானம் ஈட்டிய வியாபரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் வருமான வரி படிவத்துடன் தணிக்கை செய்யப்பட்ட வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். அப்படி தணிக்கை செய்யப்பட்ட வரிகணக்கை தாக்கல் செய்யாவிட்டால் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். வட்டி மற்றும அபராதம் போன்றவற்றையும் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

3 வருசமாக கொடுத்தாங்க
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வருமான வரி கணக்கை தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுடன் வியாபாரிகள் தாக்கல் செய்ய காலநீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் இந்த ஆண்டும் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

டுவிட்டரில் டிரெண்டிங்
இதற்காகத்தான் தான் நெட்டிசன்கள் பலரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்காத நிலையில் நிதியமைச்சரை காணவில்லை #FinanceMinisterMissing #TaxAuditExtendToday என்று நெட்டிசன்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
|
நிர்மலா வேண்டாம்
சிலர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் பியூஸ் கோயல் சில நாட்களுக்காவது நிதியமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடியையும் தங்கள் டுவிட்டரில் டேக் செய்துள்ளனர்.
|
நிர்மலாவின் தந்திரம்
இன்னொருவர் தேதி நீட்டிக்கப்படாது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கார்ப்பரேட் வரியைக் குறைந்த நிர்மலா சீதாராமன், நிதியை சமநிலைப்படுத்ததுவதற்காக கார்ப்பரேட்களிடம் இருந்து தாமத கட்டணம் மற்றும் அபராதம் வசூலிப்பதற்கான நிர்மலா சீதாராமனின் தந்திரமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
|
நேரத்தை வீணடிக்காதீர்
நெட்டிசன் ஒருவர் எதற்காக நிர்மலா சீதாராமனிடமும், வரிகள் ஆணையத்திடம் வரி கணக்கை தாக்கல் செய்ய கெஞ்சி கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தை நாடுங்கள். நேரத்தை வீணடிக்காமல் நீதிமன்றம் செல்லுங்கள் என கூறியுள்ளார். அவர் தனது பதிவில். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்த ஒரு டுவிட்டை ஷேர் செய்து பதிவிட்டு இருந்தார்.
இன்னும் பல டுவிட்கள் வெளியாகி இருக்கின்றன.அவற்றில் சில உங்களின் பார்வைக்கு..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications