இந்தியா - சீனா மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை.. மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்
டெல்லி: இந்தியா - சீனா மோதல் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுப்பது ஏன்? என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்தியா - சீனா பிரச்சினை குறித்து பேசவிடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்ததை அடுத்து, மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து சீனாவுடன் ஏற்பட்டு வரும் எல்லை பிரச்சினை குறித்து அந்நாட்டுடன் இந்தியா எப்போது பேச்சுவார்த்தை நடத்தப் போகிறது என்றும் அவர் வினவியுளார்.

எல்லையில் தொடரும் பதற்றம்
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டார் பகுதியில் கடந்த 9-ம் தேதி சீனப் படையினர் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியை சமாளிக்க முடியாமல் 200-க்கும் மேற்பட்ட சீனப் படையினர் அங்கிருந்து பின்வாங்கினர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இரு நாடுகளும் அருணாச்சல் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இதனால் அருணாச்சலில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

கேள்விகளை அடுக்கும் காங்கிரஸ்
இது ஒருபுறம் இருக்க, இந்தியா - சீனா மோதல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தொடர்ந்து பல கருத்துகளை கூறி வருகிறது. ராகுல் காந்தி நேற்று பேசும் போது, "இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது. ஆனால் இந்திய அரசாங்கமோ அந்த ஆபத்தை உணராமல் தூங்கிக் கொண்டிருக்கிறது" எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து ராணுவத் தளவாடங்கள நிறுவி வருவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

பேசவிடாமல் தடுத்த பாஜகவினர்
இதனிடையே, அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த இந்தியா - சீனா மோதல் குறித்து நேற்று மாநிங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேச முற்பட்டார். மாநிலங்களவைத் தலைவர் அனுமதித்த போதிலும் அவரை பேச விடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் டோக்லாம் பகுதியில் இருந்து சிலிகுரிக்கு அருகே உள்ள ஜம்பேரி ரிட்ஜ் பகுதி வரை சீனா தனது ராணுவத் துருப்புகளை அளவுக்கு அதிகமாக குவித்து வருகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயம். ஆனால், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச என்னை பாஜகவினர் அனுமதிக்க மறுக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசக் கூடாதா? சீனா உடனான பிரச்சினை கையை மீறி சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுடன் எப்போது இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறது?" என அவர் கேள்வியெழுப்பினார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications