போலீசிடம் இருந்து தப்பிக்க நினைச்ச ரவுடி விகாஸ் துபே நேற்று ஏன் சரண்டராகனும்? கேட்கிறது காங்.
டெல்லி: போலீசாரிடம் இருந்து தப்பி ஓட ரவுடி விகாஸ் துபே நினைத்திருந்தால் நேற்று ஏன் சரணடைய முன்வந்தார்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச ரவுடி விகாஸ் துபே இன்று கான்பூர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இந்த என்கவுண்ட்டர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கார்கள் நிறுத்தம்
கான்பூருக்குள் விகாஸ் துபே வந்த காரை பத்திரிகையாளர்கள் பின் தொடர்ந்தே வந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்தில் திடீரென பத்திரிகையாளர்கள் வாகனம் மட்டும் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிதுநேரத்திலேயே எனகவுண்ட்டர் அரங்கேறி அதற்கான திரைக்கதையை போலீசார் ஒப்பித்தனர். கடைசியாக என்கவுண்ட்டரில் விகாஸ் துபே மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

விகாஸ் துபே கார் மாற்றம்
அதேபோல் விகாஸ் துபேவை அழைத்துச் செல்லும் கார் குறித்தும் சர்ச்சை எழுந்திருக்கிறது. சுங்க சாவடி கேமராவில் விகாஸ் துபே அமர்ந்திருக்கும் காரும் கவிழ்ந்ததாக சொல்லப்பட்ட காரும் வெவ்வேறானவை. போலீசார் திட்டமிட்டே என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதையே இது காட்டுகிறது என்றும் குற்றச்சாட்டப்பட்டு முன்வைக்கப்படுகிறது.

சரண்டர்- தப்பி ஓட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவோ, விகாஸ் துபே போலீஸ் பிடியில் இருந்து தப்பியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்தவர் நேற்று ஏன் மத்திய பிரதேசத்தில் போலீசாரிடம் சரணடைய முன் வந்தார்? இன்று தப்பிக்க நினைத்தவர் நேற்று ஏன் சரணடைந்தார்? என கிடுக்குப்பிடி கேள்வி கேட்கிறார்.

மாயாவதி கேள்வி
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியோ, விகாஸ் துபே என்கவுண்ட்டர் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளியே வரும் என வலியுறுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்த என்கவுண்ட்டர் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications