ஹத்ராஸ் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை.. உ.பி.யில் ஷாக்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற, தலித் இளம் பெண், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்றுள்ள, டிஐஜி சந்திர பிரகாஷ் மனைவி, தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ நகரிலுள்ள சுசாந்த் கோல்ப் சிட்டி ஏரியாவில் சந்திர பிரகாஷ் வீடு உள்ளது. இங்கு நேற்று மாலை, அவர் மனைவி புஷ்பா பிரகாஷ் தூக்கில் தூங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 36 வயதான புஷ்பா ஏன் தற்கொலை செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை.

இது தற்கொலை என்று காவல்துறை கூறும் அதே நேரம், அவரது வீட்டில் தற்கொலை கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. சந்திர பிரகாஷ் 2005ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகும். இவர், உ.பி. அரசு ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைத்த 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவில் டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண், உயர் சாதியைச் சேர்ந்த கும்பலால் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த பெண் சடலத்தை இரவோடு இரவாக போலீசார் தீயிட்டு எரித்துவிட்டனர். நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்த்ியது. இந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை அம்மாநில அரசு அமைத்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications