ம.பியில் பெரும் இழுபறிக்கு வாய்ப்பு.. வெல்லும் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கு ஜாக்பாட்!
மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, பாஜக நிலை சற்று பரிதாபம்தான் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், ஏற்கனவே விவசாயிகள் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். 'வியாபம்' ஊழல் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரம்தான்.
இருந்தாலும் அங்கு முதல்வர் சிவராஜ் சவுகான் மட்டுமே மக்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கிறார். காங்கிரசில் எப்பவுமே கோஷ்டி பஞ்சாயத்து வேறு. இது சம்பந்தமான பேச்சு நடக்கும்போதெல்லாம் ஒருமுறை கூட சுமூக முடிவு எட்டப்பட்டதில்லை.

விரட்டி அடிக்கலாம்
இதில் சத்தமே இல்லாமல் கடந்த 15 வருஷங்களில் ஒரு பக்கம் பகுஜன் சமாஜ் கட்சி ஓரளவுக்கு வளர்ந்து விட்டது என்றாலும் பகுஜன் சமாஜால் பாஜகவுக்கு ஈடு தர முடியாது என்றே ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டது. அதே சமயத்தில், காங்கிரஸ் ஈடு கொடுத்து, பாஜகவை ஒரேயடியாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது திணறடிக்க முடியும் என்று கூறப்பட்டது. கூடவே காங்கிரசுடன் பகுஜன் சமாஜ் சேர்ந்து விட்டாலும் பாஜகவை ஒரேடியாக விரட்டி அடிக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வந்தனர்.

பெரும்பான்மை
இந்த நிலையில்தான், இங்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என கூறப்படுகிறது.

இந்தியா டுடே
ஆஜ்தக் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 102-ல் இருந்து 120 இடம் கிடைக்கலாம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 104-ல் இருந்து 122 வரை கிடைக்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கட்சிக்கு 104 முதல் 122 இடம் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 102 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழுபறி நிலை?
ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு இங்கு 126 தொகுதிகள் கிடைக்குமாம். அதேசமயம், ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு 94 இடங்களே கிடைக்குமாம். காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை உண்டாகும் என இந்த கருத்து கணிப்புகள் தெளிவுபடுத்தி உள்ளன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications