வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கில் விசாரணை- உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவிடம் வழக்கறிஞர் வினீத் தண்டா ஒரு மனுவை அளித்தார். அதில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. இவற்றை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி பாப்டே, நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைகளை நிறுத்தினால்தான் சி.ஏ.ஏ. தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியும். தற்போதைய நிலையில் வழக்குகளை விசாரித்தால் அமைதியை கொண்டுவர இயலுமா? என தெரியவில்லை.
உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்வதே அமைதியை கொண்டு வருவதற்குதான். நாடு தற்போது ஒரு கடினமான சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஆகையால் மத்திய- மாநில அரசுகள் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications